விஜய் சேதுபதி இவருக்கு வில்லனா?- வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் டிஎஸ்பி படத்தின் புரோமோஷனில் கிடைத்த அப்டேட்

விஜய் சேதுபதி இவருக்கு வில்லனா?- வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் டிஎஸ்பி  படத்தின் புரோமோஷனில் கிடைத்த அப்டேட்

ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் சார்ப்பில், கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் புதுமுக நடிகை அனு கீர்த்திவாஸ் நடிக்க உடன் புகழ், ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

பலதரப்பட்ட மொழிகளில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் கமர்சியல் திரைப்படமாக டி எஸ் பி அமைந்து இருந்தது. அதனாலயே இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சேதுபதி திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம் இது. இப்போது நேற்று வெளியான இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் படத்தை பற்றி நல்ல விதமாக கூறி வருகிறார்கள்.

 

இந்நிலையில், சன் டிவியின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிஎஸ்பி படக்குழுவின் நிகழ்ச்சியில், பொன்ராம் இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கினால் அதில் ஹீரோ யார், வில்லன் யார் என்று இயக்குனர் பொன்ராமிடம் கேட்கப்பட்டது. இதற்கு விஜய் சேதுபதி, ‘நானே வில்லனா இருந்துக்குறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *