விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
நடிப்பு: சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா, ரவீனா டாண்டன் தயாரிப்பு: சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி எழுத்து: இயக்கம்:வெங்கி அட்லூரி பிஆர்ஓ : யுவராஜ்
கதை ஓபன் பண்ணா….!
இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரராக கலந்து கொள்ளும் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரர். போட்டியில் வெற்றி பெற்று புத்தகத்தோடு இந்தியா திருப்புகிறார். அவர் வீடு பிரமாண்டமான பங்களா அதில் அம்மா ராதிகாவுடன் வசித்து வருகிறார்..தனது தந்தையின் கடந்த கால வாழ்க்கையால் திருமணத்தின் மீது வெறுப்பு கொண்டு 40 வயதைக் கடந்தும் பிரம்மச்சாரியாகவே வாழ்கிறார்.
ராதிகாவுக்கு ஒரே ஒரு குறை தன் மகன் திருமணம் செய்யாமல் இருக்கிறானே என்கிற கவலை அதனால் சஞ்சய் பார்க்கும் போதெல்லாம் திருமணம் செய்ய வற்புறுத்துகிறார் ஒரு கட்டத்தில் ராதிகாவுக்கு உடல்நிலை சற்று தடுமாற தாயின் (ராதிகா) ஆசைக்காக வாடகைத் தாய் (Surrogacy) மூலம் ஒரு குழந்தைக்கு (அபய்) தந்தையாகிறார்..


முதலில் குழந்தையை ஏற்க மறுத்த ராதிகா அதன்பின் குழந்தை மேல் உள்ள பாசத்தில் குழந்தையை அன்பாக வளர்க்கிறார் அந்த குழந்தைக்கு சில காலங்களுக்குப் பிறகு ‘போன் மேரோ’ (Bone Marrow) மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்காக அந்த அமெரிக்கா சென்று வாடகைத் தாயான மேடியை (மமிதா பைஜு) மீண்டும் அணுகுகிறார்.
வாடகைத்தாய் மமீதா பைஜு தன்னுடைய கல்லூரி படிப்புக்காக இந்த குழந்தை பெற்றெடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கதையை தெரிந்து கொள்கிறார்கள் அவர் தந்தை தாய் இருவரும் ஒரு ஆக்சிடெண்ட் இறந்து விட்டார்கள் என்பதும் அவர் தனிமையில் இருப்பதும் தெரிய வருகிறது இதனால் அவரை முதலில் ஏற்க மறுத்த ராதிகா வை தன்னுடைய நடவடிக்கை மூலம் அவர் மீது அன்பு கொள்ள வைக்கிறார் . தனது மகனுக்கு இந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறார் ..ஆனால் இருவருக்கும் இடையே வயிறு வித்தியாசம் 20 வயது இருப்பதை சூர்யா சொல்லி தட்டிக் கழிக்கிறார் அதுவும் இல்லாமல் சூர்யாவிற்கு தனது தந்தை விசுவநாதன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அவரது சிறுவயதில் இருந்து மனதில் அந்த காயம் ஆறவில்லை அதனால் திருமணம் மீது அவருக்கு ஒரு வெறுப்பு இருந்து வருகிறது இது ராதிகாவிற்கு பெரிய கவலையை உண்டாக்கி உள்ளது …!

இந்த சூழலில் மமிதா பைஜு சஞ்சய் யின் குணத்தை பார்த்து அவர் மீது காதல் கொள்கிறாள். மமிதா பைஜு செய்யும் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் சஞ்சய் இந்தியாவில் எங்களுடன் இருக்கும் வரை நான் தான் உன்னுடைய ரெஸ்பான்சிபிலிட்டி என்று அடிக்கடி சொல்கிறார்…!குழந்தைக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்ததும் ஒரு கட்டத்தில் மமிதா பைஜு வை அமெரிக்கா அனுப்ப முயல்கிறார் சஞ்சய் …!ராதிகாவிடம் அவர் மகனை விரும்புவதாக சொல்ல ராதிகா பேச்சையும் மீறி சஞ்சய் மேடியை ஏர்போர்ட் கொண்டு விடுகிறார் ..!
ஆனால் மமிதா பைஜு இந்தியா விட்டு செல்லாமல் சஞ்சய் வீட்டு முன்பு தர்ணா செய்கிறார்… கோர்ட்டுக்கு சென்று அந்த வீட்டுக்குள் மீண்டும் நுழைந்து விடுகிறார் கோர்ட் ஆறு மாத காலம் அவகாசம் தருகிறது…!
இரண்டாம் பாதியில் இந்தத் தடைகளைத் தாண்டி சஞ்சய்யின் மனம் மாறியதா? மேடியின் காதல் வெற்றி பெற்றதா? அந்த குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்தது? என்பதை உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லும் ஒரு அழகான குடும்பக் கதைதான் இப்படம்.

சூர்யா வழக்கமான ஆக்ஷன் ஹீரோ இமேஜிலிருந்து விலகி , அமைதியான குடும்ப மனிதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மமிதா பைஜு இந்த படத்தின் முக்கிய ரோல் ரொம்ப இயல்பான நடிப்பு காமெடி, எமோஷனல் என படம் முழுக்க கவனம் ஈர்க்கிறார் .
ராதிகா genz அம்மாவாக சூர்யா மாதந்தோறும் 27 ம் தேதி விஷயத்தில் casual ஆக எடுத்து கொள்வதும், மமிதா பைஜு செய்யும் சேட்டைகளை ரசிப்பது ..தன் கணவரின் இரண்டாம் மனைவியை(ரவினா டாண்டன்) ஏற்று கொள்வது , ..ராதிகா நடிப்பு ராக்ஸ்.
சித்தாரா என்டர்டெயின் மென்ட்ஸ் அண்ட் பார்ச்சூன் போர் சினிமாஸ், நிறுவனங்கள் சார்பில் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா படத்தை தயாரித்திருக்கிறார்கள்..!
வெங்கி அட்லூரி இயக்கத்தில் விசுவநாதன் அண்ட் சன்ஸ் படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம்
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 4.1/5



