‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ திரை விமர்சனம்!

‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ திரை விமர்சனம்!

இயக்குனர் – கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் – வருண், ராஹே, கிருஷ்ணா, மன்சூர் அலிகான்

இசை – கார்த்திக்

தயாரிப்பு – வேல்ஸ் இன்டர்நேஷனல், ஐசரி கணேஷ்

 

Open பண்ணா !

 

லண்டனில் வாழும் ஒருவன் சர்வதேச வாடகை கொலையாளி வேலை செய்து வருகிறான் , அமெரிக்காவை சேர்ந்த நாயகி ஒருவர் சென்னைக்கு வருகிறார் , இவர்கள் இருவரும் சென்னையில் சந்தித்துக்கொள்கிறார்கள். நண்பர்களாக பழகி வரும் இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது , இந்நிலையில் தான் யார் என்பதை காதலியிடம் நாயகன் சொல்ல ஆனால் அவளுக்கு தன்னை பிடிக்கமால் போய் விடுகிறது.. அவளை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். இதற்கிடையே பிரிந்து சென்ற காதலிக்கு சர்வதேச குற்றவாளியின் மூலம் ஆபத்து வருகிறது. காதலியின் உயிரை காப்பாற்றுவதற்கு இந்தியாவில் பொறுப்பேற்கிறார்., அதன் பின் காதலிக்கு என்ன நடந்தது..? இவர் காதலியுடன் மீண்டும் சேர்ந்தாரா? காதலியை எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, என்பதே இப்படத்தின் மீதிக் கதை,

 

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென், இயக்குநர் கெளதம் மேனனுக்கு இணையாக படத்தில் உழைத்திருக்கிறார். படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் ஒவ்வொரு ரகத்தில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் வருண், கடுமையாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆக்‌ஷன் காட்சிகள் படத்தை ஆட்கொள்ள, நாயகன் வருண் அதன் பின்னால் ஓட ஆரம்பித்து விடுகிறார். சண்டைக்காட்சிகளுக்கு நடுநடுவே வரும் காதல் காட்சிகளிலும் தனது திறமையை நிரூபித்திருக்கும் வருண், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறிதளவும் குறையின்றி செய்து, தன்னை முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார்.

 

சர்வதேச மோதலில், உள்ளூர் ரவுடியாக திடீர் எண்ட்ரி கொடுக்கும் கிருஷ்ணாவின் வேடம் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். சர்வதேச கூலிப்படையை கண்ட்ரோல் பண்ணும் கதாபாத்திரத்தில் “டிடி”யா? என்று ஆரம்பத்தில் ஆச்சரியமளித்தாலும், அதன் பிறகு வரும் காட்சிகளில் தனது நடிப்பு மூலம், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறார்.

 

 

 

நாயகியாக நடித்திருக்கும் ராஹே, பல அழுத்தமான காட்சிகளில் சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார். காதல், அச்சம் ஆகிய உணர்வுகளை தனது கண்களின் மூலமாகவே வெளிப்படுத்தி கவனம் ஈர்ப்பவருக்கு இது தான் முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை.

 

 

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டி, இறுதிக்காட்சியில் வந்தாலும், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துவிடுகிறார்.மன்சூர் அலிகான், விசித்ரா ஆகியோர் ஒரு காட்சியில் மட்டுமே வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளர் கார்த்திக் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரது பணியும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது. படத்தின் தரம் இவர்களால் உயர்ந்துள்ளது,

 

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து என்று இரு பெரிய நாடுகள் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அவற்றை காட்சிகளாக காட்டவில்லை என்றாலும், திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக பயணிக்க வைத்து, இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார். தனது ஒவ்வொரு படங்களிலும் காதல் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை உருக வைக்கும் இயக்குநர் கெளதம் மேனன், இதில் காதல் காட்சிகளை குறைத்து அதீத சண்டைக்காட்சிகளில் ரசிகர்கள் உருக வைக்க முயற்சித்திருக்கிறார்.

 

எளிமையான கருவை வைத்துக்கொண்டு ஒரு சர்வதேச அளவிலான ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், இரண்டரை மணி நேரம் நம்மை ஆக்‌ஷன் காட்சிகளில் மூழ்கடித்தாலும் அதை வித்தியாசமான முறையில் கொடுத்து ரசிக்க வைக்கிறார்

 

மொத்தத்தில், ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ ஆக்சன் பட ரசிகர்களுக்கு ஒரு காதல் விருந்து .

 

நம்ம tamil prime news.com ரேட்டிங் 3.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *