சிங் கீதம் திரை விமர்சனம் ரேட்டிங் 3.4/5
சிங் கீதம் ஒரு ஃபேண்டஸி படம்.
போபால் சிறையிலிருந்து விடுதலையாகும் நாயகன் அயான், தனது குடும்பத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தைத் தேடி குபேரபுரம் என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு மக்கள் வாழும் நிலை, தங்க சுரங்கங்களை நம்பிய வறண்ட வாழ்க்கை.
அந்த ஊரில் திடீரென ஒரு சாபம் ஏற்பட்டு, மக்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் பாடலாக மாறுகிறது. கோழியின் கூவல் கூட இசையாக மாறும் இந்த விசித்திர சூழல் கதையின் முக்கிய அம்சமாகிறது.

ஆரம்பத்தில் சொத்தை விற்று பணம் பெற்று ஓடிவிட நினைக்கும் அயான், அந்த சூழ்நிலையால் மெல்ல மாறுகிறார். மனித பேராசை, இயற்கை அழிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் ஒரு செய்தியைச் சொல்ல முயல்கிறது.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் கற்பனை வித்தியாசமாக உள்ளது. உரையாடல்களை பாடல்களாக மாற்றிய விதம் புதுமை. நடிப்பில் நாயகன் மற்றும் பிற நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களை சரியாக வெளிப்படுத்துகிறார்கள்.
மொத்தத்தில், இது வித்தியாசமான முயற்சியுடன் கூடிய ஒரு ஃபேண்டஸி கருத்துப் படம்.
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.4/5

