சந்திரமுகி 2-வில் இருந்து வெளியேற போகும் வடிவேலு!

சந்திரமுகி 2-வில் இருந்து வெளியேற போகும் வடிவேலு!

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார்.இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.இந்தி நடிகை கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார், சுபிக்‌ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.

சந்திரமுகி முதல்பாகத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக்காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.அந்தப்படத்தின் வெற்றிக்கு அவை முதன்மைக் காரணமாகச் சொல்லப்பட்டது. அதன்காரணமாக இப்போது உருவாகும் இரண்டாம்பாகத்திலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்துள்ளது.

இந்நிலையில் அந்தப்படத்திலிருந்து வடிவேலு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. சந்திரமுகி 2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம்தான் வடிவேலு கதாநாயகனாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தையும் தயாரித்திருந்தது. சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலு இருக்கவேண்டும் என்கிற நிலையில் அதற்குப் போகாமல் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி தவிர்த்து வந்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி காட்சிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் வடிவேலு மீது படக்குழு கோபமாக இருந்து இருக்கிறார்கள். இந்தத் தகவல் லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கும் சொல்லப்பட அவரும், ஒத்துவந்தால் பாருங்கள் இல்லையெனில் உங்கள் வசதிப்படி செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார். இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ஓடவில்லை என்பதோடு அதில் நடித்த ஆனந்தராஜுக்குக் கிடைத்த வரவேற்பு கூட வடிவேலுவுக்குக் கிடைக்கவில்லை. எனவே, சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலுவை நீக்குவது என்கிற அதிரடி முடிவை படக்குழு எடுத்திருக்கிறதாம்.

 

இந்தத் தகவலறிந்து அதிர்ந்து போன வடிவேலு படக்குழுவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *