வெளியேறிய சிபி சக்ரவர்த்தி, உள்ளே வந்த பிரதீப்

வெளியேறிய சிபி சக்ரவர்த்தி, உள்ளே வந்த பிரதீப்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கிவிட்டன.

அதன்படி ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல்கள் பரவின. இதற்கிடையில் சிபி சக்ரவர்த்தி உடைய கதை, ரஜினிகாந்த்-யை ஈர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் சிபி சக்ரவர்த்தி படம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தலைவர் 171 படத்தை இயக்க சிபி சக்ரவர்த்திக்கு பதில் ரஜினி, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ்டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் பரவுகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிய லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பிரதீப் ரங்கநாதன் உடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்நிலையில் அவர் ரஜினியுடன் இணைய இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *