இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணி புரியும் வாய்ப்பை அறிவித்து இருக்கிறது கோயம்புத்தூர் காவல்துறை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணி புரியும் வாய்ப்பை அறிவித்து இருக்கிறது கோயம்புத்தூர் காவல்துறை.

 

‘மாநகரம்’ படம் மூலமாகத் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்கள் மூலம் தமிழில் முன்னணி இயக்குநராக தற்போது அவர் வலம் வருகிறார். தனது படங்களில் தொடர்ந்து போதைப்பொருட்களுக்கு எதிரானக் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார் லோகேஷ்.

இந்நிலையில், கோவை காவல்துறையும் தனியார் நிறுவனமும் இணைந்து குறும்படப் போட்டி ஒன்றை கல்லூரி மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கிணைந்து ஓரு இளைஞர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஒரு தனியார் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் குறும்பட போட்டி ஒன்றையும் அறிவித்து இருக்கிறார்கள்.

போதைப் பொருள் வழக்கத்தைத் தடுக்கும் வகையில் ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் இந்தக் குறும்படம் அமைந்திருக்க வேண்டும். இதில் முதல் ஐந்து இடங்களுக்குள் வருபவர்களுக்கு இயக்குநர் லோகேஷூடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். அதில் இருந்து ஒருவர் இயக்குநர் லோகேஷூடன் அடுத்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய்யின் 67-வது படத்தை இயக்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *