வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறவில்லை – சின்மயி

வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறவில்லை – சின்மயி

விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரம் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் சின்மயி தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதோடு தான் சின்மயி தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டு தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறவில்லை என்று இப்போது நிகழ்ந்து வரும் சர்ச்சையை மையப்படுத்தி கூறியுள்ளார்.


இதுபற்றி சின்மயி கூறியதாவது.. , “நான் எப்பொழுதுமே என்னுடைய பர்சனல் வாழ்க்கையை யாருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட விரும்பியதில்லை. இனிமேலும் அப்படித்தான். அதனால் தான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் இப்போது பதிவிட்டுள்ள இந்த ஒரே ஒரு புகைப்படத்தை தவிர வேறு எந்த புகைப்படமும் எடுக்கவில்லை ஆனால் நிறைய புகைப்படங்கள் எடுத்து இருக்கலாமோ என்று இப்போது வருத்தப்படுகிறேன்

எனக்கு குழந்தை பிறந்த சமயத்தில் பலரும் வாடகைத்தாய் மூலமாக தான் குழந்தை பெற்றீர்களா என நேரடியாக எனக்கு மெசேஜ் அனுப்பி தங்களது சந்தேகத்தை கேட்டனர். அதற்கு காரணம் மேலே சொன்னதுபோல நான் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாதது தான். மேலும் கர்ப்ப காலத்தில் நான் பணிபுரியும் சமயத்தில் கூட என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்கள் என்னுடைய கர்ப்பம் குறித்து தெரிந்தாலும் எனது பிரைவசிக்கு மதிப்பு கொடுத்து புகைப்படங்கள் எடுக்காமலும் இதுகுறித்த தகவல்களை வெளியிடாமலும் வைத்திருந்தனர். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *