சாத்தான் தி டார்க் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.4/5

 சாத்தான் தி டார்க் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.4/5

சாத்தான் தி டார்க் 

நடிப்பு : எஃப் ஜே, அயிரா மோனா பெட்ரி, சாந்தினி தமிழரசன்    தயாரிப்பு: எட்வர்ட்     இசை :அஸ்வின் கிருஷ்ணா     ஒளிப்பதிவு : பாலா ஜி ராமசாமி

இயக்கம்: மணிகண்டன் ராமலிங்கம்    பி ஆர் ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்

கதை open பண்ணா ….! பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவுக்கு வாணிப நோக்கத்தோடு வந்த கிறிஸ்துவர்களோடு சேர்ந்து, சாத்தானை வழிபடுகின்றவர்களும் இந்தியாவுக்குள் நுழைந்து விடுகிறார்கள். அவர்கள் கடவுளுக்கு எதிராக நடப்பதோடு மட்டுமல்லாமல் சாத்தானை வழிபட்டால் நினைத்தை காரியம் உடனே கைகூடும் என்ற ஒரு உணர்வை கிராம மக்களிடையே பரவச் செய்கிறார்கள். சாத்தானுக்கு மிகவும் பிடித்தமானது நரபலிதான் என்ற உணர்வையும் அந்த கிராம மக்களிடையே ஏற்படுத்துகிறார்கள்.

அஸ்தினாபுரம் கிராமத்தில் பல கொலைகள் நடக்கிறது.. மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.. அவர்களை கொலை செய்தது யார் என்ற விசாரணையின் போது தான் அவர்கள் சாத்தானுக்கு நரபலி கொடுக்கப்பட்டவர்கள் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.. இதனை செய்தவர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன அவர்களின் நோக்கம் என்ன…?

மலைப்பகுதியில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சாத்தான் வழிபாடு மேற்கொள்கின்றனர். சாத்தானுக்கு உயிர்பலி கொடுத்தால்தான் ஊரில் மக்கள் நலமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அதே ஊரில் கிறிஸ்து இயேசுவின் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் சாந்தினி. ஒரு கட்டத்தில் தன் கணவர் இறந்து விட அவரும் கடவுள் மீது நம்பிக்கையை கைவிட்டு சாத்தானை பின்பற்றுகிறார். இதற்கிடையில் அந்த ஊரில் பல்வேறு அமானுஷ்ய திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார்?

கடவுளை நம்புகிறவர். கதாநாயகி ஐராவின்அம்மா மோனா பெட்டரி சாத்தானின் பிடியில் சிக்கி தன் உடல் உறுப்புகளை தானே வெட்டி சாத்தானுக்கு ரத்த அபிஷேகம் செய்கிறார். அவரின் வீட்டுக்குள் இருக்கும் ஒரு பாட்டி என்ற பெயரில் உருவம் இல்லாமல் இருக்கும் சாத்தானை வெளியில் கொண்டுவந்து விடுகிறார் கடவுள் நம்பிக்கையுள்ள கதாநாயகன் எப்.ஜே. வெளியில்வந்த அந்த சாத்தான் என்னென்ன செய்கிறது..??

பல படங்களில் சாந்தமான அம்மா அண்ணி அக்கா வேடங்களில் நடித்தவர் மோனா பத்ரே.. இவர் நாயகி ஐராவின் அம்மாவாக நடுத்திருக்கிறார் கிட்டத்தட்ட படத்தின் கதை நாயகியாகவே தோன்றியிருக்கிறார்.. இவரே இவர் பல்லை பிடுங்கிக் கொள்வது.. நாக்கை அறுத்துக் கொள்வது.. கண்களை கொடூரமாக குத்திக் கொள்வது.. சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது என வித்தியாசமாக செய்து ஒரு பயமுறுத்தும் ராட்சசியாகவே நடித்திருக்கிறார்..நாயகனாக பள்ளி மாணவராக எஃப்.ஜெ.. அயிராவை ஒருதலையாக காதலித்து அவருக்கு உதவி செய்யும் முயற்சியில் ஸ்கோர் செய்கிறார்..பள்ளி மாணவியாக ஐரா.. பயமுறுத்தும் அம்மாவிடம் மாட்டிக் கொண்டு தங்கையை காப்பாற்ற இவர் போராடும் முயற்சிகள் பார்வையாளர்களை பதற வைக்கும்..சாந்தினி தமிழரசன்.. – இவரது கேரக்டர் கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் வந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார்..ஐராவின் தோழி.. காவல்துறை அதிகாரிகள்.. ஊர் மக்கள்.. என அனைவரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்..

மிரட்டும்    காட்சிகளால் திரையரங்கத்தை அதிரச் செய்திருக்கும் இசை அமைப்பாளர் அஸ்வின் கிருஷ்ணா இப்படத்தின்  பார்வையாளர்களை இசையால் உறைய வைத்திருக்கிறார். அவருக்கு துணையாக இருந்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலா ஜி ராமசாமி.. பயம் கலந்த  மூடநம்பிக்கைகள் அந்த காலகட்டத்தில், எப்படி எல்லாம் மனிதர்களை ஆட்டி படைத்திருக்கிறது. என்று சொல்லும் இந்த படம் மூலம் நம்மை மிரட்டி விட்டார் இந்த இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம்.

நம்ம tamilprimenews .com நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *