நீ for ever திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5

நீ for ever திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5

நீ பார் எவர் ( நீ for ever)

நடிப்பு: சுதர்சன் கோவிந்த்,, அர்ச்சனா ரவி, பிரதோஷ், நோபல் ஜேம்ஸ், வித்யா, ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, ரெத்திகா, எம் ஜே ஸ்ரீராம் தயாரிப்பு: புகழ் அண்ட் ஈடன்

இசை: அஸ்வின் ஹேம்நாத்     ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சாரியார்       இயக்கம்: அசோக் குமார் கலைவாணி      பிஆர்ஓ : சதீஷ் (AIM)

கதை open பண்ணா ….!

பொள்ளாச்சியில் தாத்தா ஒய்.ஜி.மகேந்திரனின் பேரன் சுதர்சன் கோவிந்துக்கு தான் பார்த்துவைக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறார்.கரணம் இவன் அம்மா வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டு பின்னர் கணவன் கைவிட்டதால் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.. அதன் பிறகு தாத்தா ஒய் ஜி மகேந்திரன் கண்டிப்பில் வளர்கிறார் நாயகன் சுதர்சன்.. இதனால் காதலிப்பதை தவிர்த்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப் டெவலப் செய்கிறார்.. ஆனால் காதலுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு சென்று ஒரு தொழில்நுட்ப குழுமத்தில் பணிக்கு சேருகிறார் சுதர்சன். ஆனால் அக்குழுமத்தின் நிர்வாகி, அவரின் காதல் அனுபவத்தை கேட்கிறார். இதற்கு “நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை” என்று சுதர்சன் பதிலளிக்கிறார். காதல் அனுபவம் இல்லாத நீங்கள் எப்படி காதலுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்க முடியும்? முதலில் ஒரு பெண்ணை காதலித்துவிட்டு அந்த அனுபவத்தை சொல்லுங்கள் என்று குழுமத்தின் நிர்வாகி கூறிவிடுகிறார்.

இது இப்படி இருக்க, ஒரு காதல் திரைப்படத்தை இயக்க வேண்டுமென்று கதாநாயகி அர்ச்சனா தயாரிப்பாளர்களை அணுகுகிறார். அவரும் அர்ச்சனாவிடம் உங்கள் காதல் அனுபவத்தை கேட்க, “இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை” என்று அர்ச்சனா பதிலளிக்க, “நீங்கள் காதலித்துவிட்டு அந்த அனுபவத்தை கதையாக இயக்குங்கள்” என்று தயாரிப்பாளர் கூறிவிடுகிறார்.

இந்தநிலைப்பாட்டோடு சுதர்சனும் அர்ச்சனாவும் ஒரு உணவகத்க்தில் சந்திக்கிறார்கள். இருவரும் காதலிக்க முடிவு செய்கிறார்கள். சுதர்சன் உண்மையாகவே அர்ச்சனாவை காதலிக்கிறார். ஆனால் அர்ச்சனா அனுபவத்துக்கு மட்டுமே காதலிப்பதுபோல் நடிக்கிறார். இதற்கிடையில் பொள்ளாச்சியிலிருக்கும் சுதர்சனின் தாத்தா ஒய்.ஜி.மகேந்திரன் காதல் திருமணத்தை வெறுக்க காரணம் என்ன? சுதர்சன் அர்ச்சனா காதல் என்ன ஆனது? இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் “நீ பேரவர்” திரைப்படம்.

நீ ஃபார் எவர் என்று படத்தின் டைட்டிலை கேட்கும்போது இளவட்டங்களுக்கான காதல் கதையாக இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது அப்படித்தான் கதையும் இருக்கிறது.அஜய்யாக சுதர்சன் கோவிந்த், மதியாக அர்ச்சனா ரவி நடித்திருக்கின்றனர். முகங்கள் புதிதாக இருப்பதால் அவர்களது நடிப்பு எந்த ஸ்டைலில்
இருக்கும் என்று கணிக்க முடியாமல் போனாலும் அவர்களது எதார்த்தமான  நடிப்பை ரசிக்க முடிகிறது.நெடுநெடு என வளர்ந்திருக்கும் சுதர்சன் கோவிந்த்தனது தாத்தாவின் பேச்சுக்கு கட்டுப்படுவது, குடும்ப உறவில் பாசமாக இருப்பது என்பதெல்லாம் இந்த காலத்தில் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அப்படி ஒரு பிள்ளை  இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நிழலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சுதர்சன்.

நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடித்தாலும் தனது செயலிக்காக அர்ச்சனாவை காதலிக்க தொடங்குவதும் பின்னர் அவரை உண்மையாகவே காதலிப்பது என சுதர்சன்  கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக வரும் வித்யா, ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். கணவனை பிரிந்து அப்பாவின் கண்டிஷனில் அன்புக்காக ஏங்கும் அந்த கதாபாத்திரம் நம்மை நெகிழ வைக்கிறது.
ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஒய் ஜி மகேந்திரன் .தனது பண்பான அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். தேவர் மகன் சிவாஜி கணேசன் அவர்கள் அமர்ந்து சேரில் உட்கார்ந்து கொண்டு வீட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்து கண்டிப்பாக ஒரு தந்தையாக, தாத்தாவாக ,படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
யோகி, என்ற கதாபாத்திரத்தில் வரும் நிழல் கள்ரவி குறுக்கு வழியில் சூதாடி பணத்தை தொலைத்து விட்டு குடும்பத்தையும் இழந்து நிற்கும் பரிதாபக் காட்சிகள்.
பிரபாகர், என்ற கதாபாத்திரத்தில் வரும் எம்.எஸ். ஸ்ரீதர் தன்னுடைய கோபத்தினால் குடும்பத்தை இழந்து தவித்து விட்டு, பிறகு நாயகன் உதவியுடன் சேர்வது மனதை தொடும் காட்சிகள். ஒரு புதிய கோணத்தில் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இப்படத்தை இயக்கியுள்ளார்.

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.6/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *