காளிதாஸ் 2 திரைவிமர்சனம் ரேட்டிங் 3.7/5

காளிதாஸ் 2 திரைவிமர்சனம் ரேட்டிங் 3.7/5

காளிதாஸ் 2

நடிப்பு:   பரத், அஜய் கார்த்திக், அபர்னிதி, பவானி ஸ்ரீ, சங்கீதா, ஆனந்தநாக், பிரகாஷ் ராஜ், கிஷோர் இசை சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு சுரேஷ் பாலா

தயாரிப்பு    ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் ஃபைவ் ஸ்டார் செந்தில்   இயக்கம்  ஸ்ரீ செந்தில் மக்கள் தொடர்பு : யுவராஜ்

கதை open பண்ணா ….!          

    மிரட்டலான கட்சிகளோடு படம் தொடங்குதுஆம் படத்தொடக்கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு ஜோடி கொலையாக, அதைத் தடுக்கப்போன இன்ஸ்பெக்டர் பரத் அது முடியாமல் திரும்புகிறார்.அப்படியே கதை இந்த அபார்ட்மெண்ட் பக்கம் திரும்புது …!

சென்னை புறநகர் பகுதியில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதே அடுக்குமாடி குடியிருப்பில் அபர்ணதி அனந்த் நாக், தம்பதிகள்  4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.அதே அபார்ட்மெண்ட் இல்லை செகரெட்டரியாக இருக்கிறார் சங்கீதா.

அபர்ணதி வீட்டின் நேர் எதிரான அடுக்கின் ஃபிளாட்டில் குடியிருக்கும் சந்தேகத்துக்கிடமான சைக்கோவைப் போன்ற இளைஞன் அஜய் கார்த்தி வசித்து வருவதுடன் அபர்ணதி வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டும் இருக்கிறார். ஒருநாள் அபர்ணதியின் குழந்தை தனியாக அஜய் வளர்க்கும் நாய் மீது ஆசை பட்டு அதன் பின்னாடியே வர அதிர்ஷ்டவசமாக அப்போதைக்கு அந்தக் குழந்தை தப்பிக்கிறது.அதற்குப் பின் இன்னொரு நாள் நடக்கும் புதுவருடக் கொண்டாட்டத்தின் போது அஜய் கார்த்தி வளர்த்து வரும் நாயுடன் நட்புக் கொள்வதற்காக அவர் ஃபிளாட்டுக்குள் நுழையும் அந்தக் குழந்தை காணாமல் போகிறது..புத்தாண்டுக் கொண்டாட்டம் குழந்தையைக் காணாமல் களேபரமாக… பரத் தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்து குழந்தையைத் தேட முயற்சிக்கிறது.

.அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி ஏற்கனவே சிறுமி கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர் என்பது தெரிய வருகிறது.  அவரை கைது செய்து விசாரிக்கையில் .முதலில் இறந்து போன நாயும் அதற்குப் பின்னர் அந்த குழந்தையின் சடலமும் கிடைக்கிறது.இதிலும் தோற்றுப் போக விரும்பாத பரத் தன் விசாரணையைத் தொடங்க, அசிஸ்டன்ட் கமிஷனர் பவானி ஸ்ரீயும் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி அதில் இணைகிறார்.அந்தப் புலனாய்வில் எல்லா சந்தேகங்களும் அஜய் கார்த்தியிடமே வந்து சேர்கிறது.அவர் ஏற்கனவே ஒரு பாலியல் புகாரில் கைதானதும் தெரியவர, அவரை அதிரடியாகக் கைது செய்கிறார்கள். ஆனால் சாட்சியங்கள் சரியில்லாததால் அட்வொகேட் பிரகாஷ்ராஜ் உதவியுடன் அவர் உடனே வெளியே வந்து விடுகிறார்…!

இதே வேளையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மற்றொரு சிறுமியை உடல் கிடைக்க அதை பார்த்து பரத் மற்றும் பவானி ஸ்ரீ  இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.கதை அடுத்தடுத்த ட்விஸ்ட் அதிரடி திருப்பங்களுடன் பரபர வென நகர்கிறது பவனி ஸ்ரீ பரத் பேச்சை கேக்காமல் செயல்படுவது பின்னர் பரத்தின் நேர்மை தைரியம் உணர்ந்து இறுதியில் பரத் மற்றும் பவானி ஸ்ரீ  இருவரும் சேர்ந்து  உண்மை யான  கொலைகாரன் யார் ? என்பதை கண்டுபிடித்தார்களா ?   அந்த அஜய் கார்த்தி  சிறையில் இருந்து வெளியே வந்தாரா ?  என்பதே  ’காளிதாஸ் 2’

ஆனந்த் நாக் – அபர்ணதி ஜோடியில் அபர்ணதி பாத்திரம். அவரது ஃப்ளாஷ் பேக் நாம் எதிர்பாராதது.அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவுக்குள் வந்திருக்கும் பூவே உனக்காக சங்கீதா, அவருக்கும் அழுத்தமான கதா பாத்திரம்.அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனராக வரும் பவானி ஸ்ரீ நடிப்பு பாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறது. . இரண்டொரு காட்சிகளில் மட்டும் வரும் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ்ராஜும், கறிக்கடை கிஷோரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்கள்

இயக்குநர்  ஸ்ரீ செந்தில்  இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யார் அந்த கொலைகாரன் என்று யூகிக்க முடியாத விதத்தில் ட்விஸ்ட் வைத்து கதையை மிரட்டலாக நகர்த்தியுள்ளார் ..அதிலும் கிளைமாக்ஸ் காட்சி நம்மை பதற வைக்கிறதுசஸ்பென்ஸ் திரில்லர் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல தீனி ….இயக்குனர் ஸ்ரீ செந்தில் மற்றும் காளிதாஸ் 2 படக்குழு அனைவர்க்கும் பாராட்டுக்கள் …!

 

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.7/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *