தக் லைஃப் திரைவிமர்சனம் RATING : 3.4 /5

தக் லைஃப் திரைவிமர்சனம் RATING : 3.4 /5

படம்: தக் லைஃப்

நடிப்பு: கமல்ஹாசன், எஸ் டி ஆர், திரிஷா, நாசர் , அபிராமி, அசோக் செல்வன், வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, மகேஷ் மஞ்சு ரேக்கர், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், சேத்தன்  தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ்,  இசை: ஏ ஆர் ரகுமான்  ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன் இயக்கம்: மணிரத்தினம்  பிஆர்ஓ: டைமண்ட் பாபு, சதீஷ் S2

படத்தின் கதை open  பண்ணா ..

ராயர் சக்திவேல் என்ற கமல்ஹாசன் டெல்லியில் 30 ஆண்டுகளுக்கு  முன்பாக தன்னுடைய அண்ணன் நாசருடன் இணைந்து தாதா வேலையை செய்து வந்திருக்கிறார்.அப்போது அவருடன் மோதலில் இருந்தவர் சதானந்த் என்கின்ற இன்னொரு தாதா .. சதானந்த்  செய்த சூழ்ச்சியில் காவல்துறை திடீரென்று கமலின் குடியிருப்பின் உள்ளே நுழைந்து கமல் அண்ட் கோ-வை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்துகிறது.இதில் அந்த குடியிருப்பில் இருந்த அப்பாவிகள் சிலர் மாண்டு போகிறார்கள். அந்த அப்பாவிகளில் ஒருவர் பேப்பர் போட வந்தவர். அந்த எளிமையான மனிதரின் சிறு குழந்தைகளான சந்திராவும், அமரனும் தனித்தனியே பிரிகிறார்கள்.அமரனிடம் சந்தராவை கண்டு பிடித்து ஒப்படைப்பதாக வாக்கு கொடுக்கிறார் சக்திவேல் ..!

அமரனை சக்திவேல் தன்னுடைய பாதுகாப்பில் வைத்து வளர்த்து வந்திருக்கிறார்.அமரனை  தன்னுடைய மகன் போல என்று அடிக்கடி சொல்லி தன்னுடைய வாரிசாகவே அவனை ஆக்கி இருக்கிறார்.ஒரு கட்டத்தில் நாசர் மகள் மரணத்துக்கு காரணமானவனை கொலை செய்த குற்றத்துக்கு சக்திவேல் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது தாதா கூட்டத்தின் பொறுப்பை அமரனிடம் ஒப்படைக்கிறார்…!

சக்திவேலின் மனைவி ஜீவா என்ற அபிராமி. சக்திவேல் நைட் கிளப்பில் நடனமாடி கொண்டிருந்த இந்திராணி என்கிற திரிஷாவுடனும் தனக்கு  மனைவி இருந்தும் துணைவி கூட  வெளிபடையான  வாழ்க்கை அதை கள்ள தொடர்பு எனவும் சொல்லல்லாம் .. (அது “திராவிட” பன்ச்) .. இவருக்கு  மனைவி அபிராமி மூலமாக மங்கை என்ற மகளும்  இருக்கிறாள்.அவளுக்கு ஒரு  காதல்.. அவளுக்காக  சக்திவேலின் சம்மதம் வாங்கி அவர்கள் திருமணம் நடக்க அமரன் உதவுகிறரர் .. கேங்க் லீடராக இருக்கும் சக்திவேலுக்கே அனைத்து பெருமைகளும் சென்று சேர்வதால் அவர் மீது பொறமைப்படுகிறார் அவருடைய அண்ணன் நாசர். இதனால் வளர்ப்பு மகனான அமரனிடம் அவனுடைய அப்பாவை கொலை செய்தது சக்திவேல்தான் என்று  ஒரு வன்மத்தை அவரது மனதில் விதைக்கிறார் நாசர்….இதன் விளைவாக அமரின் தலைமையில் நாசர் ,ஜோஜி ஜார்ஜ், பக்ஸ்  சதிக்கூட்டம்   சக்திவேலுக்கு சமாதி கட்டும் வேலையை செய்ய திட்டம் போட …

இந்த சதி வலையில் நேபாளத்தில் மாட்டிக் கொள்ளும் சக்திவேல் சுடப்பட்டு பனி  மலையில் தூக்கி எறிய படுகிறார்.. தன்னுடைய வாழ்வின் இறுதி கட்டத்திற்கு சென்று புத்த சாமியார்களால்  தெய்வாதீனமாக மீள்கிறார்.  புத்த பிக்குகளிடம்  அடி முறை வர்ம கலைகள் கற்று கொண்டு 2 வருடம் ஆன பின் பழி வாங்க புறப்படுகிறார். அண்ணன் நாசர்  முதல் அமரன் உள்ளிட்ட மற்றவர்களின் கதி என்ன ஆனது…அமரன் தங்கை சந்திரா கிடைத்தாளா ..?   என்பதுதான் மீதி  தக் லைப் gangster படத்தின்   முழு நீ ….. ……ள  கதை.!

.படம் முழுவதும் தன்னுடைய நடிப்பினால் நிறைந்துள்ளார்  கமலஹாசன்..தன்னுடைய மனைவியின் பரிதாப நிலையை பார்த்து கண் கலங்குகின்ற காட்சியில் நிஜமாகவே ஒரு நல்ல கணவனாக திரும்பி வந்திருக்கும் கமலாகவே நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர் ... படத்தின் துவக்க காட்சியே வித்தியாசமானது. அப்படி ஒரு அழகான காட்சி அமைப்பையும், கேமரா கோணங்களையும் தமிழ் சினிமா இதுவரையில் பார்த்து இருக்காதது..கமல் இறுதி வரையிலும் தன்னுடைய ‘சக்திவேல்’ என்கின்ற அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை காண்பித்து இருக்கிறார்.இன்னொரு பக்கம் தன்னுடைய மனைவியுடனான அவருடைய காதலும், நேசமும், பாசமும், பரிவும் வெளிப்படும்போது ஜில்லென்றுதான் நமக்கும் இருக்கிறது.ஜோஜூ ஜார்ஜ் உடனான சண்டை காட்சியில் கமலின் வேகம் பளிச்சிடுகிறது. அதேபோல் யூத்தான கமலை காட்டும்பொழுது அப்படியே நாயகன் கமல் நம் கண் முன்னே சூப்பர் என்று சொல்ல வைத்திருக்கிறது.. அதே சமயம் அவருடைய கேரக்டருக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் த்ரிஷா உடனான அவரது உறவு சுகர் bp  மாதிரி அவர்க்கு இது ஒரு வியாதியாம் .. சுகர் baby  என்ன இதெல்லாம் ..?

தன்னுடைய அறிமுக காட்சிகளிலேயே ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் சிலம்பரசன் என்ற சிம்பு. அவருடைய வழக்கமான மேனேரிசங்களை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு மணிரத்தினத்தின் நடிகனாக மட்டுமே இந்தப் படத்தில் வலம் வந்திருக்கிறார் சிம்பு…சதாநந்தனின் தங்கை மகனை கொலை செய்கின்ற அந்த காட்சியில் சிம்பு காட்டுகின்ற ஸ்டைலும், நடிப்பும் அசத்தல் என்று சொல்லலாம்.இடைவேளை காட்சியில் கமல் முன்பாக வந்து நிற்கின்ற அந்த தோரணை அடடா என்று சபாஷ் போட வைக்கிறது மணிரத்தினத்தின் இயக்கமும், சிம்புவின் அந்த தோற்றமும்… திரிஷாவுடனான சிம்புவின் அந்த தொடர்பு எல்லை மீறிய தொடர்பாகவும், அத்துமீறிய உறவாகவும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இது  காதலா ? காமமா ??என்ன கர்மம் சார் இது ..? சிம்பு இறுதி காட்சியில் கமலுடன் போடும்  சண்டை காட்சி சிம்பு ராக்ஸ் .. அவரை அநியாயமாக சாகடித்து அவர் ரசிகர்களை காய படுத்தி விட்டார் இயக்குனர்.

ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு அட்டகாசம்.. ஆசம் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் கட்சியிலிருந்து கடைசியாக அமரன் சரிந்து விழும் வரையிலும் படத்தை வெகுவாக பார்க்க வைத்திருப்பது ரவி கே. சந்திரனின் அந்த ஒளிப்பதிவுதான்.முதல் அரை மணி நேரம் அந்த பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளைகூட ரம்மியமாக, அழகாக படம் பிடித்து இருக்கிறார்கள். அதேபோல் சண்டை காட்சிகளை இதைவிடவும் துல்லியமாக, வேகமாக படம் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு கேமரா team  சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறது.   புது தில்லி, கோவா, நேபாளம், திருச்செந்தூர், காயல்பட்டிணம்(?) என்ற பல ஊர்களையும் அழகுபட பதிவாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், திரிஷாவின் அழகை காட்டுவதிலும் மற்றைய நட்சத்திரங்களை அழகாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ….ஒளிப்பதிவாளர்  ரவி கே. சந்திரன். அவர்க்கு தனி  பாராட்டுக்கள்.

இசைபுயல் AR ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு முன்பே ஹிட் என்றாலும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ‘தீ’ பாடிய ‘முத்த மழை’ பாடல் படத்திலேயே இல்லை என்பது மிகப் பெரிய சோகம். ஏன் அதை கட் செய்தார்கள் என்று தெரியவில்லை.அஞ்சு வண்ண  பூவே’ என்ற காதல் பாடலும் மிக அழகாக படம் பிடிக்க பட்டுள்ளது ..அன்பறிவு சகோதரர்கள் சண்டை காட்சிகள் அத்தனையையும்  படமாக்கியுள்ளனர்..அதிகமான ரத்தத்தையும் சிந்த வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொடூரமான முறையிலும் கொலைகளை காட்டி இருக்கிறார்கள். திரைக்கதை  காட்சிகள் அங்கே இங்கே என கோர்வை இல்லாமல் bit bit  ஆக  அலை பாயுதே..! மணி சார் என்ன தான் ஆச்சு உங்களுக்கு .. ஒரு வழியாக தங்கை சந்தராவை அண்ணனிடம் சினிமா தனமாக கொண்டு வந்து .. போங்க சார் இது உங்க படமே இல்லை ..!?

‘தக் லைப்’ 

நம்ம tamilprimenews.com RATING : 3.4 / 5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *