என் பல இரவுகளை அவரது இசையில் தான் கழித்திருக்கிறேன்! இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தின் போஸ்டர் வெளியீடு விழாவில் நடிகர் தனுஷ்!

என் பல இரவுகளை அவரது இசையில் தான் கழித்திருக்கிறேன்! இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தின் போஸ்டர் வெளியீடு விழாவில் நடிகர் தனுஷ்!

 

Connekkt Media, PK Prime Production & Mercuri Movies நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமலஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினை துவங்கி வைத்தார்.

 

இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு ரங்கராஜ் பாண்டே , இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு, முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரின் வாழ்த்தினர்.

 

இந்த நிகழ்வில்

 

நடிகர் கமலஹாசன் பேசியதாவது,

 

எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்பதை எனக்குப் புரியவில்லை இது மிக நீண்ட ஒரு பயணம் உங்களுக்கு உண்டு எங்களுக்கு இடையிலான நட்பு என்பது மிகப்பெரியது அவர் இவர் தான் இளையராஜா என்று தெரியாமல் இருந்த காலத்திலிருந்து அறிந்தவன் நான் பாவலர் பிரதர்ஸ் உடன் பணி புரியும் காலத்திலிருந்து இவரைத் தெரியும் நான் அப்போது அவரைத்தான் இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஒரு விழாவில் தான் இளையராஜாவைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது அவரது குணா படப் பாடல் குணாவுக்கும் அபிராமிக்குமானதல்ல எனக்கும் அவருக்குமான காதலைச் சொல்லும் பாடல். நான் எழுதினேன், அவரை இசையமைத்தார். எங்கள் காதல் பாடல் அது. ராஜாவின் கதையை எளிதாக எடுக்கலாம். கஷ்டம் அல்ல. அதை எடுக்கணும் என்று நினைத்தால் 8 பார்ட் வரை கூட எடுக்கலாம், ராஜாவைப் பிடிக்காதவர்கள் எடுத்தால் அது ஒரு மாதிரியானது. என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

 

இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி, அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்திருக்கிறார். அவரது இசையால் எப்போதும் அவர் நம்முடன் தான் இருக்கிறார். அவரது ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்கள் எங்களுக்கு ஞாபகம் வரும். தற்போது அவரிடம் பணி புரியும் போது அவரைப் பற்றி நிறையத் தெரிய வந்தது. உண்மையில் அவர் மிகத் தன்னடக்கமானவர். என்னிடம் படம் குறித்து ஏதாவது விவாதிக்கும் போது கூட இதை நான் சொல்லலாமா? என அனுமதி கேட்பார். அவர் இசையமைப்பைப் பார்ப்பது வரம், அவர் இசையில் மெஜீசியன். விடுதலை படத்தில் ஒரு பாடலுக்கு நான் கு பாடல்கள் தந்து விட்டார். அவர் வரலாற்றை எடுப்பது என்பது நம் நாட்டின் வரலாற்றுப் பதிவு ஆகும். கிட்டதட்ட 80 வருட வரலாறு. நம் வரலாற்றின் புக்மார்க்க்காக அவர் இசை இருக்கிறது. அவர் வாழ்வு படமாவது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தனுஷ் நாயகனாக நடிப்பது இன்னும் மகிழ்ச்சி. அவருக்கு இது மிகப் பெரிய சவால் ஆனால் அந்த சவால்களை அவர் தாண்டி வருவார். இயக்குநர் அருணுக்கு இது மிகப்பெரிய பரிசு. இந்தப் படத்தில் இளையராஜா சாரி இசையைக் கேட்க நான் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

நடிகர் தனுஷ் பேசியதாவது,

இது வாழ்வின் மிக முக்கியமான தருணம். எனது சிறுவயதிலிருந்தே, இசைஞானி இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகன். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். அது தான் உண்மை, நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும்போது, அவை நிறைவேறும். இங்குப் பலரும் ராஜா சாரின் இசையில் தான் தங்கள் கவலைகளை மறக்கிறார்கள். இரவுகளில் தூக்கம் வராதவர்கள் அவரது இசையால் தான் தூங்குகிறார்கள். என் பல இரவுகளை அவரது இசையில் தான் கழித்திருக்கிறேன் எனக்கு இரண்டு பேரின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது கனவு. ஒன்று ரஜினிகாந்த் சார், என்று இளையராஜா சார், இப்போது இளையராஜா சாரின் பாத்திரத்தில் நான் நடிப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி. இளையராஜா சார் மீதுள்ள அன்பாலும், நட்பாலும் இங்கு வந்திருக்கும் உலக நாயகன் கமலஹாசன் சார் அவர்களுக்கு என் நன்றிகள். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மீது மிகப்பெரிய அழுத்தம் இருக்கிறது, ஆனால் நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள். இந்த படத்தை மிக மகிழ்ச்சியாகவும் காதலுடனும் நாம் உருவாக்குவோம். இந்த படம் என்பது இளையராஜாவின் மீதான நம் காதல்.

 

இளையராஜாவின் அற்புதமான பாடல்களின் இசை குறிப்புகளால் நிறைந்த, ஒரு அழகான போஸ்டரை வெளியிட்டு , உலக நாயகன் கமல்ஹாசன் இளையராஜா படத்தினை துவக்கி வைத்தார். கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *