சம்பளமே வாங்காமல் குரல் கொடுத்த விஜய் சேதுபதி ! மனம் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்!
![சம்பளமே வாங்காமல் குரல் கொடுத்த விஜய் சேதுபதி ! மனம் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்!](https://tamilprimenews.com/wp-content/uploads/2023/07/1600x1200_MaaveeranTrailer4K_168763_306e1044-5a62-4cc1-8c82-38dc1ae818d6.jpg)
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக மற்றும் அதிதி ஷங்கர் கதானாயகியாக நடித்திருந்தார், இப்படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்தப் படத்திற்கு மண்டேலா பட இசையமைப்பாளர் பரத் சங்கர் தான் இசையமைத்துள்ளார், மேலும் இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனருக்கு இது இரண்டாவது படமாக இருந்தாலும், படத்தை சிறப்பாக எடுத்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இதே படத்துக்காக முக்கிய ரோலில் தனது குரல் மூலம் நடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார் விஜய் சேதுபதி. படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதியின் குரலும் ஒரு முக்கிய காரணம்.
இந்நிலையில், இதற்காக விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை. தனக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என டப்பிங் பேசுவதற்கு முன்பே புரொடக்ஷன் டீமிடம் சொல்லியுள்ளார் விஜய் சேதுபதி.இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் சொல்லி நெகிழ்ந்தார்