மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்!

மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்!

 

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறியவர் கே. வி. ஆனந்த். இவர் முதலில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். பின்னர் சினிமா மீது ஏற்பட்ட காதலால் பிரபல ஒளிப்பதிவாளரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து வேலையை கற்றுக் கொண்டார். அப்போது மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கே.வி.ஆனந்த்தை அணுகியிருக்கிறார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்று கொடுத்தது.

இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல்வன், பாய்ஸ் பாங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவு செய்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற படத்தை இயக்கிய இயக்குநராக அறிமுகமானார். இவர் பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு சினேகா மற்றும் சாதனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் மகள் சாதனாவிற்கு நேற்று திருமணம் நடைபெற்றுச்சு. எக்மோரில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. விஷ்ணுராஜ் என்பவரை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் இருவருமே ஆர்க்கிடெக் படித்து இருக்காங்க.

சென்னையில் நடந்த இந்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஷங்கர் தவிர பிரபலங்கள் பெரும்பாலும் யாரும் கலந்து கொள்ளலை. ஆனால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த பல ஹிரோக்கள் வராத சூழலில் விஜய் சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *