நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!
![நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!](https://tamilprimenews.com/wp-content/uploads/2023/06/arjun-in-leo.jpg)
தமிழ் திரையுலகினர் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் படம் ‘லியோ’ இந்தப் படத்தை இயக்குனர் லோகெஷ் கனகராஜ் இயக்குகிறார் . இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்திற்காக தயாராகிரார் நடிகர் விஜய், அந்த படம் முடிந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்துக்கு கதைகளைக் கேட்கிற முடிவில் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.
பார்லிமெண்ட் தேர்தல் வரும் நேரத்தில் ஒரு வருடம் படம் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார்
இதனையடுத்து தொடர்ந்து படங்கள் செய்துகொண்டிருப்பதால் உண்டான சலிப்பா இல்லை அரசியல் ஈடுபாடா எனப் பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இது பத்திரிக்கையாளரிடம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது
‘சில மாசங்களுக்கு ஷூட்டிங் பரபரப்பு இல்லாமல் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என நெருங்கியவர் களிடம் விளக்கம் சொல்லியிருக்கிறாராம் விஜய்.