‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தின் பிரஸ் மீட்!

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தின் பிரஸ் மீட்!

1988ம் ஆண்டில் மனோரமா, பாண்டியராஜன், ஊர்வசி நடித்து, வெளியான படம், ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. இப்போது அதே பெயரில், நளினி நடிப்பில் மற்றொரு படம் உருவாகி இருக்கிறது.  என்ஜாய் சினிமாஸ் மற்றும் பிரண்ட்ஸ் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்தை ஹேமா சூர்யா இயக்கியுள்ளார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், பவர்ஸ்டார் சீனிவாசன், அனுஷிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.  முத்துராமன், கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா இசை தட்டை வெளியிட எஸ்.ஏ.ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து நளினி கூறுகையில், “கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட அற்புதமான கதையம்சம் கொண்ட படம் இது. சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆச்சி மனோரமா நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பை பயன்படுத்த ஏவிஎம் நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளோம் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *