வேண்டுகோள் விடுத்த டிடி!

வேண்டுகோள் விடுத்த டிடி!

20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி, வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறார்.

சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் டிடி நடந்து வருகிறார். ஒரு சில தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்தவாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், டிடி நிற்காமல் ஒரு நாற்காலியில் உடகார்ந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இத்தனை நாளா எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நான், நிகழ்ச்சி போய்க் கொண்டு இருக்கும் போது, எதையாவது எழுதிக்கொண்டே இருப்பேன், அதே போல மூளைக்குள் எதாவது யோசனை ஓடிக்கொண்டே இருக்கும். இந்த போட்டோவை இப்போது நான் பகிர காரணம், பல மணி நேரமாக நின்று கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை.

 

இதனால், நிகழ்ச்சியை நடத்துவர்களுக்கு நான் அன்பான கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். தனி இருக்கை கொடுங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று தனி இருக்கை கொடுங்கள். பார்வையாளர்கள் பார்க்கும் போது நாங்கள் நின்று கொண்டு இருப்பது போலத்தான் தெரியும். பல மணி நேரம் நின்று கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் எங்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று டிடி தனது இன்ஸ்டா மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *