ராஜமௌலியை கொல்ல இருக்கும் குழுவில் நானும் இருக்கிறேன்- ராம் கோபால் வர்மா!

ராஜமௌலியை கொல்ல இருக்கும் குழுவில் நானும் இருக்கிறேன்- ராம் கோபால் வர்மா!

RRR மூலம் சர்வதேச அளவில் பிரபலமான ராஜமவுலி குறித்து பிரபல தெலுங்கு பட இயக்குனரான ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரண், ஜீனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, ஆலியா பட் என நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் உருவான RRR படம், இந்தியா முழுவதும் வசூலில் வாரி குவித்தது. இந்தியா தாண்டி இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலை தாண்டி, விருதுகளையும் இந்த படம் குவித்து வருகிறது. கோல்டன் க்ளோப் விருதை சிறந்த இசையமைப்பிற்காக கீரவானி வாங்கினார். இப்போது ஆஸ்காரில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் “நாட்டு நாட்டு” பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த நேரத்தில் ராஜமௌலிக்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பை சுட்டி காட்டி ராம் கோபால் வர்மா டிவிட் செய்துள்ளார்.

அதில், “ராஜமவுலி சார் உங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீதுள்ள பொறாமையால் சில இயக்குனர்கள் உங்களைக் கொல்ல குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவில் நானும் இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் நான் உண்மையை கூறிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

ராம்கோபால் வர்மா இப்படி கூறி இருப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *