வாரிசை முந்தியதா துணிவு!
![வாரிசை முந்தியதா துணிவு!](https://tamilprimenews.com/wp-content/uploads/2023/01/thunivu-varisu-pongal.jpg)
பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் நேற்று ஜனவரி 11ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.
இரண்டு படத்திற்குமே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல
வரவேற்பு கிடைக்க, வசூல் வேட்டை இரண்டு படங்களுக்கும் தொடர்ந்து போய் கொண்டு இருக்கிறது.
தற்போது வந்த தகவல்படி அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடியையும், விஜய்யின் வாரிசு ரூ. 22 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களும் இணைந்து கிட்டதட்ட 50 கோடி அருகில் வசூலித்து இருக்கிறது.