அடுத்து இவர் தான்! உறுதியாக இருக்கும் பிரதீப்
![அடுத்து இவர் தான்! உறுதியாக இருக்கும் பிரதீப்](https://tamilprimenews.com/wp-content/uploads/2022/12/pradeep-ranganathan-in-love-today-movie-first-look-thalapathy-vijay_1656918344.jpg)
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இன்று கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறிவிட்டார். நல்ல கதைக்கு பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹீரோ, ஹீரோயின் தேவையில்லை என்பதை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு உணர்த்திய இயக்குனர் இவர்தான்.
2019ல் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானார் பிரதீப். ஜெயம் ரவிக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடி வரை வசூல் செய்தது.
அதன் பிறகு 3 வருட இடைவெளிக்குப் பிறகு பிரதீப் இயக்கிய படம் லவ் டுடே. இப்படம் கோலிவுட் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதை தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தது. பிரதீப் ரங்கநாதனை இப்போது ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம்தான் பிரதீப்பின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ்டுடே இதுவரை 90 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. OTT ரிலீஸுக்குப் பிறகும் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி பிரதீப்பிடம் பணம் பார்த்த நிறுவனம் மீண்டும் அதே ஆசையில் அவரை அடைத்து வைத்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திலும் தளபதி விஜய்தான் ஹீரோ என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தொடர்ந்து பல படங்களில் பிசியாகி இருந்தாலும், அவருக்காக காத்திருக்க போவதாக பிரதீப் முடிவெடுத்துள்ளார். அதே சமயம் நடிகர் விஜயை வைத்து இயக்கும் படம் தாமதமானால், தன் நடிப்பில் தான் படத்தை இயக்க பிரதீப் முடிவெடுத்துள்ளார். வேறு எந்த நடிகரையும் இயக்கும் முடிவில் அவர் இல்லையாம்.