நயன்தாராவின் அடுத்த படத்தை அறிவித்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவின் அடுத்த படத்தை அறிவித்த விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா, பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் என்டி-81 படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுவரும் இயக்குநர்களில் ஒருவர் துரை செந்தில் குமார். இவர் சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல், காக்கிச்சட்டை என்ற இரண்டு படங்களையும், நடிகர் தனுஷ்யை வைத்து கொடி, பட்டாஸ் என்ற இரண்டு படங்களையும் கொடுத்துள்ளார். தொடர் வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றவர் துரை செந்தில் குமார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து வெற்றி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா கைவசம் பல படங்கள் உள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகள் முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தை துரை செந்தில் குமார் இயக்குகிறார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக NT-81 எனப் பெயரிடப்பட்டுள்ளது. நயன்தாரா பிறந்தநாளான இன்று, இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த தகவலை ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் தனது ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *