துணிவு படத்திற்கு ஆடியோ லாஞ்ச் நடக்குமா? நடக்காதா? -அஜித் கொடுத்த பதில்

துணிவு படத்திற்கு ஆடியோ லாஞ்ச் நடக்குமா? நடக்காதா? -அஜித் கொடுத்த பதில்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துணிவு படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகின்றன. இதில் முக்கியமான அம்சமாக நடிகர் அஜித் குமார் கலந்துகொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது.

ஒரு சினிமாவை வசூல் சாதனை படைக்கவைக்க சிறந்த கதை, நடிகர்கள் தேர்வு மட்டும் போதாது கூடவே மார்க்கெட்டிக் டெக்னிக்கும் வேண்டும். அதற்காக தான் தயாரிப்பாளர்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே இசை வெளியீட்டு விழா, பிரஸ் மீட் ஆகியவற்றை ஏற்பாடு செய்து படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் விக்ரம் படத்துக்காக உலக நாயகன் செய்த புரொமோஷன் அனைவரது மனதையும் மாற்றியுள்ளது. மீடியாக்களை மட்டுமின்றி ரசிகர்களையும் நேரில் சந்தித்து, தங்கள் படத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்பது முக்கியம் என்று விக்ரம் படம் அனைவருக்கும் புரிய வைத்துள்ளது.

ஆனால் நடிகர் அஜித்தோ ஒரு படத்தை கமிட் செய்யும் போதே இது போன்ற நிகழ்ச்சிக்கு தம்மை அழைக்க வேண்டாம் என்று கூறிவிடுவதால் அவருடைய படத்தின் இசைவெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த புரோமோசனிலும் அவர் பல ஆண்டுகளாக கலந்து கொள்ளவில்லை.

ஆனால் இப்பொழுது துணிவு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்வார் என்று கோடம்பாக்கத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. அதே சமயம் துணிவு பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் கேட்டு கொண்டதால், அஜித் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அஜித் உடைய பி ஆர் ஓ மூலமாக அவர் தெரிவித்த தகவல் டிவிட்டரில் தற்போது வெளியாகி இருக்கிறது. ” ஒரு நல்ல படத்திற்கு, அது மட்டுமே புரோமோஷன் – அஜித் குமார்” என்று அந்த டிவிட்டில் இருக்கிறது.

இவ்வளவு நாள் புரோமோசன் பற்றி பேசாத அஜித், இந்த தகவலை தெரிவித்துள்ளதால், இப்போது அவர் புரோமோஷனுக்கு வருவாரா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *