ரெட் ஜெயண்ட்யை மறுத்த விஜய்
![ரெட் ஜெயண்ட்யை மறுத்த விஜய்](https://tamilprimenews.com/wp-content/uploads/2022/10/313032010_797431971368386_4797776623325833937_n.jpg)
விஜய் நடித்து கொண்டு இருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியானது. இதனிடையே அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக வெளியிட அப்படக்குழு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாவிட்டாலும், பொங்கல் வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த இரண்டு படங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் எந்த படத்தின் உரிமையை கைப்பற்றப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி அந்நிறுவனம் இரண்டு படங்களின் ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றும் முனைப்பில் இருந்துள்ளது. ஆனால் நடிகர் விஜய் தனது வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட்டுக்கு தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை மட்டும் அந்நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நடிகர் விஜய், வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட்டுக்கு கொடுக்காததற்கு முக்கிய காரணம் ஒன்றும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், விஜய் நடிப்பில் இதற்கு முன் வெளியான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் தான் கைப்பற்றி இருந்தது. அதேபோல் அப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த கே.ஜி.எஃப் 2 படத்தின் உரிமையை எஸ்.ஆர்.பிரபு கைப்பற்றி இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் அப்படத்தை ரெட் ஜெயண்ட் தான் வெளியிட்டது. பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், கே.ஜி.எஃப் 2 பட உரிமை தங்கள் கைவசம் இருந்த பகுதிகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தை போட்டுவிட்டதாகவும், இதனால் பீஸ்ட் பட வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தான் தற்போது வாரிசு பட உரிமையை ரெட் ஜெயண்ட்டுக்கு விஜய் தர மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் லலீத் குமார் தான் கைப்பற்றி இருக்கிறார். இதனால் பொங்கலுக்கு தியேட்டர்களை கைப்பற்ற இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.