இந்திய உளவாளி “சர்தார்” – கார்த்தி

இந்திய உளவாளி “சர்தார்” – கார்த்தி

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் , ஜிவி பிரகாஷ் இசையில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள ’சர்தார்’ திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியாக உள்ளது. ’சர்தார்’ படத்தின் நீளம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.ொரு 2.30 மணி நேர மக்களை மகிழ்விக்கும் படமாக இது அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த பட அனுபவம் பற்றி நடிகர் கார்த்தி அளித்துள்ள பேட்டியில், “தமிழில் உளவாளிகள் பற்றிய கதைகள், ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான படங்கள் அதிகமாக வ்ருவதில்லை. கமல் சார் விக்ரம் மாதிரியான படங்கள் செய்து இருந்தாலும், அது சர்வதேச உளவாளிகளின் கதை. இது நமது ஊரில் இருக்கும் ஒரு உளவாளியின் கதை. அவன் செயல்பாடு எப்படி இருக்கும்? அந்த அமைப்பு எப்படி இயங்கும் என்பது பற்றியான கதை.

இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நிறைய கெட்அப்கள் போட்டிருக்கிறேன். அப்பாவாக நடிக்கத்தான் மிகவும் சிரமப்பட்டேன். ஆயுத படை போலீஸ் என்பதுதான் நிஜ கேரக்டர் மற்றவை அந்த போலீஸ் போடுகிற வேஷங்கள்தான்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியாகியுள்ள பாடலான ’ஏறுமயிலேறி’ என்ற பாடல் நடிகர் கார்த்தியின் குரலில் உருவாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது ’சர்தார்’ படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதன் டிரைலர் லாஞ்ச் நாளை நடக்கவிருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *