சூப்பர்ஸ்டாரின் அடுத்த இரண்டு பட இயக்குனர்கள்

சூப்பர்ஸ்டாரின் அடுத்த இரண்டு பட இயக்குனர்கள்

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து கைக்கோக்கும் இயக்குநர்கள் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. அந்த இரு படங்களும் லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கின்றனர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினி தனது 170-வது படத்திற்காக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை தேர்வு செய்திருக்கிறார். இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்து சிவகார்த்திகேயனை வைத்து தனது முதல் படமான ‘டான்’ இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி.

சிபி சக்ரவர்த்தியை அடுத்து ரஜினியின் 171-வது படத்தில் அவரை இயக்க இருப்பது அவரது மகளும் இயக்குநருமாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதைக்கு இயக்குநரும் தயாரிப்புத் தரப்பும் மட்டுமே முடிவாகி இருக்கும் நிலையில், படத்தின் மற்றத் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரங்கள், பட அறிவிப்பு ஆகியவை ‘ஜெயிலர்’ பட வெளியீட்டிற்குப் பின்பு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *