பாராட்டுகளை குவித்த லெஜெண்ட் சரவணன்!

பாராட்டுகளை குவித்த லெஜெண்ட் சரவணன்!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் சமீபத்தில் ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று விஜயதசமியை முன்னிட்டு லெஜண்ட் சரவணன் சொந்த ஊரில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் அவரது வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெற்று வருவதாகவும் அதில் அந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் சாப்பிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து லெஜண்ட் சரவணன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் , ‘என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்து இருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *