அருள்வான் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5
படம்: அருள்வான்
நடிப்பு: அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, ஜான்விஜய், காளி வெங்கட், வி டிவி கணேஷ் தயாரிப்பு: எஸ் ஜி சரவணன்
இசை: ஜிவி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு : எம் சுகுமார் இயக்கம்: கணேஷ் விநாயகன் பிஆர்ஓ : நிகில் முருகன்
கதை ஓபன் பண்ணா….!
தேனி மாவட்டம் கேரளா எல்லையிலிருக்கும் மலைக்கிராமத்தின் முகட்டில் தமிழும் மலையாளமும் கலந்த ஒரு பாஷை பேசும் மலைவாழ் மக்கள் படிப்பறிவு இல்லாமல் வாழ்கிறார்கள். இதை பயன்படுத்தி மேல்குடி மக்கள் இவர்களுக்கு கடன் கொடுத்து பத்திரங்களில் கை நாட்டு வைத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை அபகரித்து கொள்கிறார்கள். எதிர்த்து பேசினால் காட்டிலகா அதிகாரிகளை வைத்து தாக்குவது என்று அடாவடி செய்கிறார்கள். அந்த பகுதியில் வாழும் கந்தன் – அமரவள்ளி ( ஆரவ்- ரம்யா பாண்டியன்) ஜோடியின் அன்பு மகள் குறிஞ்சி (பேபி கிருத்திகா) பக்கத்து ஊரில் இருப்பவர்கள் பள்ளிக்கு செல்வதை பார்த்து தரனும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்…இக்கொடுமையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் படிப்பறிவு தேவையென உணர்ந்து தனது பேத்தி பேபி கிரிடிகாவை படிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி தற்கொலை செய்து கொள்கிறார் அக்கிராமத்து நாட்டாமைக்காரர் குறிஞ்சியின் . தாத்தாகலெக்டரை சந்தித்து கேட்டால் பள்ளிக்கூடம் கட்டித் தருவார் என்று டீச்சர் ஒருவர் சொல்வதைக் கேட்டு கலெக்டரை சந்திக்க மலைக் கிராமத்திலிருந்து வெளியேறும் குறிஞ்சி வழி தெரியாமல் திண்டாடுகிறாள் அவரால் கலெக்டரை சிந்திக்க முடிந்ததா? ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா ..? என்பது கதைக்களம் .


கலெக்டர் வேடத்தில் அருள்நிதி நடித்திருக்கிறார். மென்மையான அணுகுமுறை, அமைதியான ஆனால் உறுதியான பேச்சு என அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். படத்தின் பாதி வரை தலை காட்டாத அருள்நிதி இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் மேம்பட்ட நடிப்பின் மூலம் மனதில் குடி புகுந்து கொள்கிறார்.அருள்நிதி ஆட்சியராகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். ஆட்சியரின் அதிகார வரம்பை திரையில் கொட்டி தீர்த்திருக்கிறார் அருள்நிதி. ஆட்சியரின் கடமை எது என்பதையும், ஆசிரியரின் பணி எத்தகைய உயர்வான பணி என்பதையும் தனது உயிரோட்டமான நடிப்பால் உணர்த்தியிருக்கும் அருள்நிதி பாராட்டுக்குரியவர்.
மலைவாழ் பகுதியில் வாழும் மலைச்சாதியை சேர்ந்தவராக ஆரவ் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். மகள் கிருத்திகா படிக்க ஆசைப்பட்டதும் கண்டிப்பாக பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாக அவர் உறுதி கூறுவது ஒரு அப்பா மக்களுக்கு கொடுக்கும் நம்பிக்கை …!ஆரவ் ஜோடியாக வரும் ரம்யா பாண்டியன், கலெக்டர் உதவியாளராக வரும் விடிவி கணேஷ் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்கள் ..!


ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்.. மலையின் அழகை சிதைக்காமல் அப்படியே தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். மலையின் உச்சி முகட்டில் இருக்கும் அந்த கிராமத்தை கண்சிமிட்டாமல் அப்படியே பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை கதையோடு பின்னி பிணைந்திருக்கிறது. பாடல்கள் இனிமை ..!
அனைவர்க்கும் கல்வி வேண்டும் …அதிலும் பெண் கல்வி முக்கியம் கல்வி அனைத்து மக்களுக்கும் பரவலாக கிடைக்க வேண்டும் எனும் கருத்தை ஆழமாக பதிய வைத்துள்ளார் இயக்குனர் கணேஷ்விநாயகன் அவரது டீம் அனைவருக்கும் பாராட்டுக்கள் …!
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.2/5

