LIK (love Insurance Kompany) திரைவிமர்சனம் ரேட்டிங் 3.9/5

 LIK (love Insurance Kompany) திரைவிமர்சனம் ரேட்டிங் 3.9/5

 LIK (love Insurance Kompany)

நடிப்பு : பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, மாளவிகா, கௌரி ஜி கிஷன், சாரா, ஆனந்தராஜ்

தயாரிப்பு: நயன்தாரா,   எஸ் எஸ் லலித் குமார்       இசை: அனிருத்        ஒளிப்பதிவு: ரவி வர்மன்    இயக்கம்: விக்னேஷ் சிவன்        பிஆர்ஓ : யுவராஜ்

கதை open பண்ணா ….!

காதலித்து திருமணம் செய்தவர் எஸ் ஜே சூர்யா.. ஒரு கட்டத்தில் இவரும் தனிமையில் இருக்க 2040 ஆம் ஆண்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற LIK செயலியை உருவாக்குகிறார்..இதன் மூலம் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்.. தங்களின் காதல் உண்மைதானா என்று தெரிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.. இந்த LIK செயலி க்கு குரல் கொடுத்து அந்த கூறலுக்கு மறைமுகமாக உயிர் கொடுத்தவர் நம்ம ஹீரோ .. இந்த செயலியின் ஒரு வாடிக்கையாளர் நாயகி கீர்த்தி செட்டி.: ….

2040 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இளைஞர் கையிலும் லைக் (lik ) என்ற கம்பெனியின் ஆப் (செயலி )இருக்கிறது. அந்த செயலியில் காதல் ஜோடிகள் கை கொடுத்தால் இருவருக்கும் காதல் பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை நொடிப்பொழுதில் காட்டிவிடுகிறது இது ஒரு புறம் இருக்க தொழில்நுட்ப வசதி இல்லாமல் பசுமை உலகம் என்ற கிராமத்தில் இருக்கிறார் சீமான்.. இவரது மகன் பிரதீப் ரங்கநாதன்.. தன் மகனையும் செல்போன் இல்லாத பசுமை உலகத்தில் வாழவைத்துக் கொண்டிருக்கிறார் சீமான்..

இந்த சூழ்நிலையில் நாயகி கீர்த்தி மீது காதல் கொள்கிறார் பிரதீப்.. ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரியாமல் செல்போனை வாங்கி அந்த LIK செயலியை டவுன்லோட் செய்து காதலை வளர்க்க விரும்புகிறார்.. இவர்களுக்குள் காதல் இருக்கிறதா என்பதை கண்டறிய லைக் செயலியில் கைகோர்த்து சோதிக்கின்றனர்.இவர்களின் காதல் வெறும் 3 சதவிகிதம்தான் என்று அந்த இணைதளம் சொல்கிறது. இதனால் விரக்தியடைந்த பிரதீப் ரங்கநாதன் ஆத்திரமடைந்து, விஞ்ஞானி எஸ்.ஏ.சூர்யாவிடம் “நீங்கள் கண்டுபிடித்த இந்த இணையதளம் பொய்யானது. மனிதனுடைய இதயத்தை குறிப்பாக காதலை ஒரு எந்திரம் தீர்மானிக்க முடியவே முடியாது. காதலின் உணர்வுகளை எந்திரம் எப்படி அறிந்து கொள்ளும்.” என்று சண்டையிடுகிறார். அத்துடன் “நான் என் காதலை தொடர்ந்து என் காதலி கிரித்தி ஷெட்டியை திருமணம் செய்து உங்கள் இணையதளம் பொய்யானது என்று நிரூபிப்பேன்” என்றும் சவால் விடுகிறார். அந்த சவாலில் பிரதீப் ரங்கநாதன் வெற்றியடைந்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

வழக்கம் போல இளைஞர்களை கவரும் வகையில் பிரதீப் ரங்கநாதன் பிரகாசிக்கிறார்.. கண்டதும் காதல்.. தொழில்நுட்பம்.. காதல் உணர்வுகள் என அனைத்தையும் அழகாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.. தனக்கே உரிய மேனரிசத்தை பல காட்சிகளில் வெளிப்படுத்துகிறார்..ஹாலிவுட் படம் போல் இயக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.  பிரதீப் ரங்கநாதனின் எதார்த்த நடிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் .  மொத்தத்தில் இந்த படம் விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனித உணர்வுக்கும் இடையே நடக்கும் யுத்தம் ..முடிவு என்ன ..விஞ்ஞானம் துவரை …? அதற்கு எது எல்லை…? பாண்டஸி படம் ரசிகர்களுக்கு விருந்துகாட்சிகள் பிரமாண்டமாக ரொம்ப கலர் fulla மிரட்டுதுவாழ்த்துக்கள் LIK டீம்…..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *