ஹேப்பி ராஜா திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5
“ஹேப்பி ராஜா”.
நடிப்பு: ஜிவி பிரகாஷ், கெளரி ப்ரியா, அபாஸ், ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், மதுரை முத்து, ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் எடிட்டர் செல்வாஆர்.கே. தயாரிப்பு பியாண்ட் பிக்ச்சர்ஸ், இசை ஜஸ்டின் பிரபாகரன், இயக்கம் மரியா ராஜாஇளஞ்செழியன், Pro REKHA

கதை open பண்ணா ….!
கோவை அருகே ஒரு அழகிய கிராமத்தில் ஆரம்ப பாடசாலை ஆசிரியராக வேலை பார்க்கிறார் ஜார்ச் மரியான். இவரின் உருவத் தோற்றம் அழகில்லாமல் இருப்பதால் அக்கிராம மக்களால் “குதிரை முட்டை வாத்தியார்’ என்று கேலி செய்யப்படுகிறார். இவருக்கு மகனாக அழகான தோற்றத்தில் பிறக்கிறார் ஜி.வி.பிரகாஷ்….!இவருக்கு இவரது அப்பாவால் நல்ல காதல் அமையாமல் போகிறது. தேன்மொழி, காதலியாக அமைந்தும் மாமனார் ஜார்ஜ் மரியன் குதிரை முட்டை என்று ஊரார் கேலி செய்வார்கள் குதிரை முட்டை காரர் மருமகள் “என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டு பிரிந்து போகிறார்…இதனால் மனமுடைந்த ஜிவி அதன் பிறகு நண்பனின் பேச்சைக் கேட்டு,வேலைக்காக பெங்களூர் செல்கிறார் , தகவல் தொழில் நுட்பத்துறை பொறியாளரான இவர், பெங்லளூரில் உள்ள ஒரு குழுமத்தில் வேலைக்கு செல்கிறார்…!
அங்கு மதுரை முத்து துணையுடன் அங்கு அக்குழுமத்தின் உச்சபட்ச அதிகாரியாக இருக்கும் கௌரி பிரியாவை , ஜி.வி. காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். கௌரி பிரியா அழகான உருவத்தோற்றத்திலிருக்கும் அப்பாஸின் மகள் ஆவார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்ய போகும் நேரத்தில் ஜார்ஜ் மரியன், தன் உறவினர்களுடன் பெங்களூர் வந்து என்ட்ரி கொடுக்க, நிச்சயதார்த்தம் நின்று போய்விடுகிறது. எதற்காக நிச்சயதார்த்தம் நின்றுபோனது? என்பதுதான் கதை.
இருவருக்கும் இடையே ஈகோ ஏற்பட சம்பந்தி இருவரில் யார்? காலில் யார்? மன்னிப்பு கேட்க வைப்பது என்று கதை நகர்கிறது ..!பெண் வீட்டாரால் தன் தந்தை ஜார்ஜ் மரியான் அவமானப்படும்போது அதைப் பார்த்து துடிக்கும் ஒருமகனின் ரத்தக் கொதிப்பை ஜி.வி.பிரகாஷ் தத்ரூபமாக கொட்டித்தீர்க்கிறார். தனலில் நிற்பதுபோல் அவர் கொந்தளிக்கும் காட்சி உணர்வுப்பூர்வமானது.


அப்பாஸ் கிராமம் வந்த பிறகு இருவரும், தங்களது பழைய கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் அந்த ஆற்றங்கரை ஓரக் காட்சிகளும், ஜார்ஜ் மரியம் சொல்லும் அவர் அப்பா சப்பானி பற்றிய கதையும் ,மனதை ஈரப்படுத்துகிறது.உச்சக்கட்டக் காட்சியில் ஜார்ஜ் மரியானின் நடிப்பு கண்கலங்க வைக்கிறது. மகன் மீது தந்தை வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்க்தும் காட்சி அருமை. அதே உச்சக்கட்டகாட்சியில் ஜி.வி.பிரகாஷ் தந்தை தன் மீது வைத்திருக்கும் பாசத்க்தை நினைத்து நினைத்து கண்ணீர் சிந்தும் கட்டமும்படம்பார்ப்பவர்களின் கண்கள் நனைகின்றன
இயக்குநர் அழகாக கதையோட்டத்துடன் சொல்லியுள்ள விதம், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு நகரும் இளைஞர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை சொல்கிறது.. தந்தை மகன் எப்படி இருக்க வேண்டும் எனதை மனதை வருடும் வகையில் சொன்ன விதம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் மற்றும்அவர் டீம் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் …!
அனைவரும் குடும்பத்துடன் சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இந்த “ஹேப்பி ராஜ்”.
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.6/5

