இறுதி முயற்சி திரைவிமர்சனம் RATING 3.2/5
இறுதி முயற்சி
நடிப்பு: ரஞ்சித்,மெகாலி , விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு தயாரிப்பு: வெங்கடேசன் பழனிச்சாமி இசை: சுனில் லாசர் ஒளிப்பதிவு: சூரியகாந்தி
இயக்கம்: வெங்கடேசன் பழனிச்சாமி பி ஆர் ஓ : வேலு

கதை : OPEN பண்ணா …!
இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் ஒரு காவல் அதிகாரியை தலையில் முண்டாசு கட்டிய சைக்கோ ஒருவன் கொலை செய்து விட்டு தப்பித்துசெல்கிறான் …!இரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஞ்சித் – மெகாலி.. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள்.. ஜவுளி வியாபாரத்திற்காகவும், மகன் குமரனின் (நீலேஷ்) இருதய ஆபரேஷனுக்காகவும் கந்து வட்டி கும்பல் தலைவன் ராஜப்பாவிடம் (விட்டல் ராவ்) ரூபாய் 80 லட்சம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். வியாபரத்தில் நஷ்டமடைந்ததால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி பெருகி ஒரு கோடியைத் தாண்டுகிறது.வீட்டு வாடகை, பள்ளி கட்டணத்துடன் கந்து வட்டிக் கட்டணத்தையும் கட்ட முடியாமல் தவிக்கும் ரவிச்சந்திரன் தன் நண்பர்களிடம், தெரிந்தவர்களிடம் கடன் கேட்க அனைவரும் கைவிரித்து விடுகின்றனர். கந்துவட்டி மாஃபியா கும்பல் ரவிச்சந்திரனிடம் இருந்து கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறது…!.இதற்கிடையே குண்டு அடிப்பட்டு போலீஸ் இடமிருந்து தப்பிய சைக்கோ கொலையாளி ரவிச்சந்திரனின் வீட்டில் நுழைந்து அவன் அங்கு சில நாட்கள் தங்குகிறான். ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு இந்த சைக்கோ கொலையாளி தங்கள் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியாது.

கந்து வட்டி ராஜப்பாவின் தம்பி காத்தவராயன் வட்டியுடன் கடனை திருப்பிக் கொடுக்க முடியாதவர்களின் மனைவி, மற்றும் பெண் பிள்ளைகளை வலுகட்டாயமாக தூக்கிப் போய் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஒரு கொடூரமானவன். இந்நிலையில் ரவிச்சந்திரன், தான் கடன் வாங்கிய அசலுக்கு மேல பல மடங்கு வட்டி தொகை கட்டியபின்னரும் இன்னும் வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டுகிறான் காத்தவராயன். அண்ணன் கந்து வட்டி ராஜப்பா, ஒரு வாரத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உன் மனைவி வாணி மற்றும் மகள் கௌரி , தூக்கிப் போய் விடுவேன் என்று ரவிச்சந்திரனை, எச்சரித்து இரண்டு அடியாட்களை ரவிச்சந்திரனின் வீட்டை கண்காணிக்க வைக்கிறார்.மெஹாலி குளிக்கும் போது பாத்ரூம் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து வீடியோ எடுக்கிறார்கள் கந்து வட்டி அடியாட்கள் ..மெஹாலி அவர்களை பார்த்து அலறுகிறார்..கணவனிடம் சொல்லும் போது கோபம் வந்தாலும் கையறு நிலையில் ரஞ்சித் தவிக்கும் பொது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் …!

எவ்வளவோ முயற்சித்தும் நண்பர்கள் கூட யாரும் உதவ முடியாத நிலையில் , வட்டி பணத்தை கட்ட முடியாமலும் மன உளைச்சலில் தவிக்கும் ரவிச்சந்திரன் தற்கொலைக்கு முயலும் போது அவரை சமாதானப்படுத்தி மனைவி வாணி காப்பாற்றுகிறார். குடும்பத்திற்காக தற்கொலை முயற்சியை தற்காலிகமான கைவிட்டாலும் வாங்கிய கடனை கந்து வட்டியுடன் திரும்ப சேலுத்த பணத்திற்கு என்ன செய்வதேன்று தெரியாமல் தவிக்கும் தம்பதியினர் .. வேறு வழியின்றி இறுதி முயற்சியாக தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ரஞ்சித்..
கந்துவட்டி கடன் கழுத்தை நெறிக்கும் போது அதிலிருந்து மீண்டு வந்தார்களா…?தற்கொலை செய்து கொண்டார்களா…?அந்த சைக்கோ கொலையாளி யார்..?அவர் என்ன ஆனார்? என்பதை திரில்லர் சஸ்பென்ஸ் கலந்து கம்யூனிசம் பேசி உள்ளார் ..இயக்குனர்..!
ஒரு குடும்பஸ்தன் கந்து வட்டிக்கு கடன் வாங்கினால் என்னவெல்லாம் அவதிக்கு உள்ளாவான், அவன் குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை அந்த வலியை திரையில் சினிமாத் தனமாக இல்லாமல் நிஜ உணர்வுகளாக இயக்குனர் வெங்கடேசன் பழனிச்சாமி ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்துவது அதற்கு ரஞ்சித் உயிர் கொடுத்து இருப்பது அருமை..!
கடன் வாங்கியவர்கள் தற்கொலை ஒரு தீர்வாகாது …அதிலிருந்து மீண்டு வர வழி தேட வேண்டுமே தவிர உயிரை மாய்த்து கொள்வது தவறு ..எனும் கருத்தை ரொம்ப இயல்பாக படம் பிடித்து கட்டிய இறுதி முயற்சி டீம் .. இந்த படத்தின் வெற்றி முதல் நல்ல முயற்சியாக இருக்கட்டும்.இயக்குனர் மற்றும் படக்குழு அனைவர்க்கும் பாராட்டுக்கள் ..!
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.2/5

