கோலிவுட்டை மிரட்டிய ராட்சசன் படம் வெளியாகி நான்கு ஆண்டு ஆகிறது!

கோலிவுட்டை மிரட்டிய ராட்சசன் படம் வெளியாகி நான்கு ஆண்டு ஆகிறது!

விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த 2018 அக்டோபர் 5 ம் தேதி இதே நாளில் வெளியான ராட்சன் படத்தின் #4YearsOfRatchasan ஹாஸ்டாக்கை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வாருகிறாரகள்.

ராட்சசன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானாலும், வெளியான பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக பெரிதும் பேசப்படும் படமாக மாறியது. இன்றோடு படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ராட்சசன் 2 திரைப்படம் எப்போது வரும் என பலமுறை விஷ்ணு விஷாலிடம் ரசிகர்கள் கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

அந்த அளவிற்கு படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அமலாபால், சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்த இத்திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். ஜி.டில்லிபாபு, ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தார்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். .

குழந்தைகளை கடத்திக் கொள்ளும் ஒரு சைக்கோ கொலையாளியின் இந்த கதையை அடுத்து தான், அதிக அளவில் க்ரைம் த்ரில்லர் படங்கள் தமிழில் வரத்தொடங்கின. அப்படி பார்க்கும் போது, த்ரில்லர் படங்களுக்கு ஆரம்ப புள்ளி இது வைத்தது என்று கூட கூறலாம்.

அனைத்து த்ரில்லர் அம்சத்துடன் வெறும் 20 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட ராட்சசன் திரைப்படம், பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமத்திலும் நல்ல வசூல் பெற்றது. இந்நிலையில், தற்போது க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ராட்சசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் முடிவெடுத்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *