அமரம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.8/5

அமரம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.8/5

அமரம் – திரைவிமர்சனம்

 

கிழக்குத் தொடர்ச்சி மலையின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்யும் ‘அமரம்’!
விவசாயம் பொய்த்துப் போனதால் வறுமையில் சிக்கித் தவிக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலை கிராம மக்கள், தங்களது பொருளாதார நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பெரிய மனிதர்களால் செம்மரம் வெட்டுதல், கொலை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில், கூலிப்படை நபரான ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வாலின் தந்தையை கொலை செய்கிறார்.


அவரைப் பழிவாங்கத் தேடும் ஐரா, ஒரு கட்டத்தில் மனம் மாற, இருவரையும் சுற்றி ஆபத்துகள் உருவாகின்றன. அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே ‘அமரம்’.
தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலை மக்களின் வாழ்வியலையும், அவர்களின் பொருளாதாரப் போராட்டத்தையும் மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா.

 

சமூகப் பிரச்சனையுடன் காதல், ஆக்‌ஷன், துரத்தல் என கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக இணைத்திருப்பது படத்தின் பலம்.
நாயகன் ராஜன் தேஜஸ்வர் அதிகம் பேசாமல் பார்வை மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

ஐரா அகர்வால் தந்தையின் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கும் பெண்ணாகவும், பின்னர் மனப்போராட்டத்தை எதிர்கொள்ளும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகிநீடு, ஹரிஷ் பெராடி உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.


பரத் குமாரின் ஒளிப்பதிவு கிழக்குத் தொடர்ச்சி மலையின் வறட்சியையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழலையும் இயல்பாகக் காட்சிப்படுத்துகிறது. மிக்கி ஜெ. மேயரின் பின்னணி இசை ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ஆர். ஸ்ரீராமரின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலையின் சொல்லப்படாத வாழ்வியலை கமர்ஷியல் அம்சங்களுடன் இணைத்து, சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் ‘அமரம்’ கவனம் ஈர்க்கும் படைப்பாக அமைந்திருக்கிறது.

அமரம் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்..!

நம்ம tamilprimenews ரேட்டிங் 3.8/5