Zee தமிழ் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நடனத் திருவிழா: புதிய பொலிவுடன் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு – 7 PM**
Zee தமிழ் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நடனத் திருவிழா: புதிய பொலிவுடன் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு – 7 PM**
**சென்னை:** தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ், தனது மிகப்பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடன நிகழ்ச்சியான “டான்ஸ் ஜோடி டான்ஸ்” ஷோவின் புதிய சீசனை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இதுவரை ஒளிபரப்பாகிய சீசன்கள், 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்து, 120-க்கும் மேற்பட்ட நடன ஜோடிகளை அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. இத்தகைய புகழ்பெற்ற நடன மேடையில், இந்த முறை முற்றிலும் புதுமையான வடிவத்தில் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” (Dance Jodi Dance) என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக சீசனாக, மாபெரும் களமாக
உருவெடுத்துள்ளது.
**அனைத்துத் தரப்பு பெண்களுக்கான அங்கீகாரம்:** பெண்களின் திறமைகளைக் கொண்டாடும் விதமாக இந்த சீசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தீவிரத் தேர்வுகள் மூலம், அனைத்துத் தடைகளையும் உடைத்து சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்கள், திருமணமான பெண்கள், தாயானவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் எனப் பலதரப்பட்ட திறமைசாலிப் பெண்கள் இந்த மேடையில் தங்களின் நடனத் திறமையை நிரூபிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
**நிகழ்ச்சியின் சுவாரசியமான வடிவமைப்பு (Format):**
முதற்கட்ட ஆடிஷன்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் 20 திறமையாளர்கள் மெகா ஆடிஷனுக்கு முன்னேறுவர். அவர்களின் தனித்திறன் மற்றும் நடன திறமை ஆகியவற்றின் அடிப்படையில் 18 வயதிற்கு மேற்பட்ட 10 சிறந்த பெண் நடனக் கலைஞர்கள் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இந்த 10 பெண் போட்டியாளர்களும், சின்னத்திரையின் முன்னணி ஆண் பிரபலங்களுடன் (Male Celebrity Dancers) ஜோடி சேர்ந்து தங்களின் நடனப் பயணத்தைத் தொடர்வார்கள்
**நட்சத்திர நடுவர்கள் மற்றும் வழிகாட்டிகள்:**
இந்த பிரம்மாண்ட மேடையை அலங்கரித்து, போட்டியாளர்களை வழிநடத்த, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான டாப் ஸ்டார் பிரசாந்த், டான்சிங் குவீன் சிம்ரன் மற்றும் புன்னகை அரசி சினேகா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வழிகாட்டிகளாக (Mentors) இருந்து போட்டியாளர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளனர்.

**இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல் அதிகாரி V.S ராகவன் அவர்கள் பேசியதாவது:**
“கடந்த 18 வருடங்களாக ஜீ தமிழ், மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. வித்தியாசமான கதைகள் மட்டுமில்லாமல், ‘சரிகமப’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் திறமையான போட்டியாளர்களுக்கு, கனவு மேடையை அமைத்து, ஒரு சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடையாக இருந்து வருகின்றன.
பலரின் கனவை நனவாக்கும் மேடையாகவும், பல திறமையாளர்களுக்கு அங்கீகாரமும், அடையாளமும் தந்து அவர்களின் வாழ்வின் வழிகாட்டியாகவும் இந்த மேடை இருந்து வருகிறது. ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ கடந்த 10 வருடங்களாக பல திறமைகளையும், பல நட்சத்திரங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த முறையும் நிறைய திறமையாளர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் மிகுந்த திறமைசாலிகள், எனவே உங்களது எதிர்பார்ப்பு பெரியதாக இருக்கலாம்.

தமிழ்நாடே இதுவரை பார்த்திராத ஒரு பவர்ஃபுல் நடுவர் குழு (Judges Panel) இந்த சீசனில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே எந்தவொரு நிகழ்ச்சியிலும், இந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான நடுவர் குழு இருந்ததில்லை. இவர்களுடைய வழிகாட்டுதல் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சீசனில் இருந்து நாம் பல புதிய திறமைகளின் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் தருணங்களை எதிர்பார்க்கலாம்.
இது வெறும் தொடக்கம்தான்… மாற்றத்திற்கான தொடக்கம்! இன்னும் பல புதிய மாற்றங்களும், புதிய நிகழ்ச்சிகளின் தொடக்கங்களும் மிக விரைவில் வரவிருக்கின்றன.”
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை – இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் , திறமையும் கனவுகளும் கொண்ட பெண்களின் புதிய எழுச்சியைக் காணத் தயாராகுங்கள்!

