மனிதன் தெய்வமாகலாம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.4/5

மனிதன் தெய்வமாகலாம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.4/5

மனிதன் தெய்வமாகலாம்

நடிப்பு  :    செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா,  ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, ஆர்.எஸ்.சதீஷ்     தயாரிப்பு  விஜயா சதீஷ் ,  இயக்கம்  டென்னிஸ் மஞ்சுநாத்

கதை open பண்ணா ….!

1980, 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்திலுள்ள ஒரு மலையடிவார கிராமத்தில் நடக்கும் கதையாக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கிறார். அந்த கிராமத்தில் 140 குடும்பங்களே வாழ்கிறார்கள். அதனால் அரசாங்கத்தின் பார்வை, ஓட்டு வாங்க மட்டுமே விழந்ததே தவிர, எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் அக்கிராமத்தில் சில பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். சில பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். செல்வராகவன் அந்த மலையடி கிராமத்தில் பதனீர் வியாபாரம் செய்கிற ஒரு விவசாயி. பக்கத்து ஊரில் நடுத்தர குடும்பத்தில் அண்ணனின் பராமரிப்பில் வாழந்துவரும் குஷி, செல்வராகவனை திருமணம் செய்து கொள்கிறார்.அவரை மாமா மாமா என்று அழைக்கும் சிறுமி அமுதா..செல்வராகவனிடம் ரொம்ப பாசமாக பழகி வருது….திருமணத்துக்கு பின் குஷி வருமானம் குடும்பம் நடத்த தேவை என்பதால் ரோட்டோரம் தாபா ஹோட்டல் ஆரம்பிக்கிறார்கள் இதற்கு கௌசல்யா குடும்பம் உதுவுது…mime கோபி நடத்தும் ஆலையில் இந்த கிராமத்து பெண்கள் வேலை சேது வருகிறார்கள் ..அவர்களுக்கு அவ்வப்போது வெட்டுக்கு பணம் கொடுத்து வாங்குவது கோபியின் வழக்கம் ..!

ஒரு நாளில்நல்லா இருந்த இளம் பெண் தூக்கு போட்டு சாக,,அதே போல ஒருநாள் திடீரென அமுதா என்ற குழந்தை பிணமாக சாலையோரத்தில் கிடக்கிறது. பிண அறுவை கூறு செய்த டாக்டர் இது பாம்பு கடித்து இறப்பு நடந்துள்ளதுஎன்று கூற …இதைப்பார்த்த செல்வராகவன் மனம் உடைந்து போகிறார். பிறகு ஓரிரு வாரங்கள் கழித்து கர்ப்பிணியாக இருக்கும் செல்வராகவனின் மனைவி குஷி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இதற்கெல்லாம் யார் காரணம் என்று செல்வராகவனுக்கு ஒரு சூழலில் தெரியவருகிறது. தெரிந்ததும் தெய்வத்தின் செயலுக்கு ஒப்பிட்டு பழி வாங்கவேண்டிய நபர்களை தேடி போய் சூரஸம்ஹரம் செய்கிறார் செல்வராகவன் …!

செல்வராகவன் இப்படத்தில் நடிக்கவில்லை. தனது எதர்த்தமான உடல் மொழியால் கதாபாத்திரத்துக்குள் கலந்துவிட்டார். உச்சக்கட்ட முந்தைய காட்சியில் மனைவி இறந்த துக்கத்தை தாங்கமுடியாமல் தரையில் உருண்டு புரண்டு அழும் காட்சியில் பார்வையாளர்களின் கண்கள் ஈரப்பதமாகிறது. குடும்பத்தலைவிக்கேற்றஅழகான பாத்திரத்தில் திரையில் தென்படுகிறார் குஷி, நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றும் கௌசல்யாவுக்கு makeup இல்லாமல் நடிக்க வைத்திருக்கிறார்..

சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் கதை நகரும் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார் இயக்குனர்அனைத்து தரப்பு மக்களும் பார்க்கவேண்ய படம்

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *