நீளிரா திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5

நீளிரா திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5

நீளிரா

நடிப்பு: நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித்    தயாரிப்பு: கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்புராஜ்     இசை: கே     ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பார்த்திபன்    இயக்கம்: சோமீதரன்    பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை open பண்ணா ….!

இலங்கை இனக்கலவரம் நடந்த 1988 காலகட்டங்களில் இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சோமீதரன்..IPKF (அமைதிப்படை ) இருதரப்பினருக்குமிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்திய ராணுவம் இலங்கைக்கு சென்றது. அமைதிக்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இந்திய ராணுவமும் ஈழப் போராளி இயக்கமும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட காலகட்டம் அது ..

வடகிழக்கு மாகாணமான யாழ்பாணத்தில் ஈழப்போராளிகளை தாக்குவதற்காக இந்திய ராணுவம், போராளிகள் தங்கி இருப்பதாக நினைத்து ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைகிறார்கள்.அனால் அந்த வீடு ஒரு ஈழத் தமிழரின் வீட்டில் திருமணம் நடக்கவிருப்பதாக இருந்தது, அந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் அந்த வீட்டில் நடக்கவிருக்கும் திருமணத்துக்காக வந்திருந்த அப்பாவி மக்கள் என்பதும் திருமணம் நடக்க இந்திய ராணுவத்திடம் அனுமதியும் வாங்கியுள்ளார்கள் என்பதையும் வீட்டுக்குள் நுழைந்த இராணுவ தளபதி தெரிந்து கொள்கிறார்.  இந்த வீட்டில் போராளிகள் தங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தவறுதாலாக வந்துவிட்டோம் என்று கூறி திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியேறும்போது, உள்ளேயிருக்கும் இராணுவத்தினரை தாக்க போராளிகள் அவ்வீட்டை முற்றுகையிட்டு கொள்கிறார்கள். இப்போது இந்திய இராணுவம் அவ்வீட்டில் தஞ்சமடைகிறது. வீட்டுக்கு வெளியே ஈழப் போராளிகளின் முற்றுகை. வீட்டுக்குள் திருமண நிகழ்வுக்காக வந்திருந்த அப்பாவி ஈழத்தமிழ் மக்கள்.  வீட்டுக்குள்  துப்பாக்கி முனையில் திருமண வீட்டாரை மிரட்டுகிறார்கள். எந்த நேரத்திலும் துப்பாக்கிக் குண்டு சீறிபாயும்   என்ற நிலையில் அந்த குடும்பத்தில் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் கூறுகிறது…

கல்யாண குடும்பத்தில் திடீரென்று ராணுவத்தினர் நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டினால் அந்த குடும்பம் உயிர் பயதில் எப்படி தவிக்கும், வயது பெண்கள் மானத்திற்காக எப்படி பதுங்குவார்கள் என்பதை எல்லாம் கண்முன் நிகழும் காட்சிகளாக காண முடியும்.திருமணம் நடத்தும் குடும்பத்தினராக வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் போன்றவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் நடிக்கவில்லை நிஜமாகவே ராணுவத்தினரை கண்டு நடுங்கி இருக்கிறார்கள்…..!ஒளிப்பதிவாளர் செல்வரத்தினம்  இரவு நேரக் காட்சிகளை இயல்பான ஒளியில் படமாக்கி, அந்த ஒரு வீட்டிற்குள்ளேயே கேமராவை சுழலவிட்டது … உணர்வுபூர்வமான இறுக்கத்தை பார்க்கும் நமக்கும் பதற்றத்துடன் பற்றிக்கொள்கிறது . படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்  படத்தைத் தொய்வில்லாமல் கச்சிதமான வேகத்தில் நகர்த்தி, ஈழ மக்களின் வலியை நமக்குள் கடத்தியுள்ளார் இயக்குநர் சோமிதரன்.

நீளிரா என்பது நீண்ட இரவு நம்முடைய tamilprimenews .com ரேட்டிங் 3.2/5 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *