கெணத்த காணோம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.7/5
கெணத்த காணோம்
நடிப்பு: யோகி பாபு, ரெய்ச்சல் ரெபாகா, லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரமேஷ் கிருஷ்ணன், கவிதா பாரதி, ராமகிருஷ்ணன் தயாரிப்பு: ஆர் ரமேஷ் பாபு, ஜெகன் பாஸ்கரன் இசை: நிவாஸ் கே பிரசன்னா ஒளிப்பதிவு : வி தியாகராஜன் இயக்கம்: சுரேஷ் சங்கையா பி ஆர் ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்
கதை open பண்ணா ….!
ராமநாதபுரம் மாவட்டம் கோடங்கிபட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மணிவாசகம் (யோகி பாபு) கோயில் பூசாரி மற்றும் சிற்பங்கள் செய்பவராக இருக்கிறார். மழை பெய்து வருட கணக்கில் ஆகிவிட்டதால் தண்ணீர் பஞ்சம் கிராமத்தில் தலை விரித்தாடுகிறது. தண்ணீருக்காக ஊரில் கிணறு வெட்ட ஊர் மக்கள் முடிவு செய்து மணிவாசகம் இடத்தில் கிணறு வெட்டுகின்றனர். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் அங்கு தண்ணீருக்கு பதில் டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது. அதைக் கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த இடத்தை போலீசும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் ஆக்கிரமிக்கின்றனர். அதன் பிறகு நடப்பது என்ன ..?


தன்னுடைய இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்று ஊர் மக்கள் கேட்கும் போது இ’ந்த இடத்தை கொடுத்து விட்டால் நான் எங்கே போய் வசிப்பது’ என்று அவர் கேட்கும் கேள்விகளில் நியாயம் இருக்கிறது. பின்னர் கிணறு வெட்ட இடம் கொடுத்ததும் ஊர் மக்களே கிணறு தோண்ட அங்கு டைனோசர் எலும்புக்கூடு கிடைப்பது எதிர்பாராத ஷாக்…….!
டைனோசர் எலும்பு கூடு கிடைத்ததும் ஊரில் பல இடங்களை தோண்டி தொல்லியல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அரசு முடிவு செய்தபோது ஊர் மக்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து யோகி பாபு செய்யும் தந்திரமான ஒரு யுக்தி படத்தை கிளைமாக்ஸ் வரை பரபரப்பாக கொண்டு செல்கிறது.
யோகிபாபு நடித்துள்ள இப்படத்தை சமூக அக்கறையுடன் இயக்கியுள்ளார் சுரேஷ் சங்கய்யா. . இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக ஒன்றிரெண்டு காட்சிகளில் ஆங்காங்கே நகைச்சுவை வசனத்தை தெளித்திருக்கிறார். படம் முழுக்க ஒரு வித பரபரப்புடன் செல்கிறது. இது யோகிபாபுவுக்குறிய படமாக தெரியவில்லை. கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் விரல்விட்டு எண்ணுகிற காட்சிகளில் மட்டும் பார்வையாளர்களின் மனதில் தேங்கி நிற்கிறார். துணை கதாபாத்திர நடிகர்களின் இயல்பான நடிப்பாலும் பேசும் எதார்த்தமான வசன உச்சரிப்பால் மட்டுமே படத்தை ரசிக்க முடிகிறது.

யோகி பாபு தனி ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு சமுதாய கருத்தை மையமாகக் கொண்டு கதைகளை தேர்வு செய்வது அவரது சிறந்த கதை தேர்வுக்கான அடிப்படையாக அமைகிறது அதுவே வெற்றியாகவும் அமைகிறது. அந்த வகையில் கெணத்தை காணோம் படமும் தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்த பட குழுவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…!
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.7/5

