வடம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5

 வடம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5

 வடம்

நப்டிப்பு  : விமல் ,நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்    தயாரிப்பு: ராஜசேகர் ஆர்

இசை: டி இமான்    ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ் குமார்     இயக்கம்: கேந்திரன் வி       பிஆர்ஓ : சதீஷ் S2

கதை open பண்ணா ….!

இரவு நேரம் முனிஷ் காந்த் நட்டியை அழைக்கிறார் ஆம் அவர் வளர்க்கும் பசுமாடு இரண்டு கன்று குட்டியை பிரசவிக்க ,அதில் ஒன்று பார்வை சரியில்லை என்று நட்டி அடி மாடாக சந்தைக்கு அனுப்ப, அந்த மாடுகளை அடிமாடுகளாக அனுப்புவதை தடுக்கும் நரேன் அவற்றை கோசாலை கொண்டு செல்ல சொல்கிறார். அதில் இந்த குட்டி கன்றுவை விமல் தன் வீட்டில் வைத்து (பாண்டி முனி) ஆக வளர்க்கிறார். எந்த கன்றுக்குட்டி சரியில்லை என்று இரட்டை கன்றுகளை பிரித்தாரோ நட்டி , அது வளர்ந்து அவருக்கு பின்னாளில் பிரச்சனையாக வந்து நிற்கிறது.

மதுசூதனன் மஞ்சுவிரட்டு விழாவில் மேடைக்கு அருகே அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் விமல் அவர் வேட்டியை உருவ, மதுசூதனன் தம்பி அன்பு தட்டி கேட்க, அன்புவை வேறொருவரால் குத்தப்பட, விமல் தான் குத்தினார் என்று, அவரை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார் .

சந்தனவேலுக்கும் கர்ணனுக்கும் இருக்கும் பகை, காலம் காலமாய் தொடர்கிறது . அடுத்து நரேனிடம் வேலை பார்க்கும் மூர்த்தி தன்மகன் ஒரு பெண் ணுக்கு தொந்தரவு கொடுத்தான் என்று விமலின் அப்பா நரேன் ,போலீசில் பிடித்துக் கொடுக்கிறார் இதனால் மூர்த்தியின் மகன் இறந்துவிட, அதனால் நரேன் மகன் விமலை கொல்ல,மூர்த்தி பொது எதிரி கர்ணனை நாடுகிறார்.

அடுத்து நட்டி நட்ராஜ்க்கு தன் மகளை கட்டி வைக்க வேண்டும். என்று முனிஸ்காந்த் விரும்புகிறார். அவரது மகள் கோமதியும் ஆசைப்படுகிறார் . ஆனால் நட்டி நடராஜ் தன மாட்டு கொட்டடி யில் சாணி அள்ளும்பெண் எனக்கு மனைவியா? என்று உதாசீனப்படுத்த, அந்த வார்த்தைகளை தன் அப்பா மொபைல் போன் வாயிலாக கேட்டு விட்ட கோமதி தனக்கு தானே தீ வைத்து இறந்து விடுகிறார். இதனால் முனீஸ்காந்த் ரத்னவேலை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த சுழலில் தன்னுடைய அக்கா கணவரை கொன்றது விமல் தான் என்று விமலை பழிவாங்க நாயகி சரியான நேரம் பார்த்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் .

ரத்தினவேல் பாண்டியனைமுனீஸ் காந்த் பழி தீர்த்தாரா?…மூர்த்தி விமலை கொல்ல திட்டம் தீட்டியது பழித்ததா? விமலை பழிவாங்க காதல் நாடகம் ஆடிய நாயகி சனக்ஷா ஸ்ரீயின் கனவு என்ன ஆனது? தன் தம்பி அன்பு இறந்ததற்கு மதுசூதனன் விமல் குடும்பத்தை பழி வாங்கினாரா? இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த கிராமத்துடம் “…..!

இப்படிபட்ட ஐந்து கதைகள் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து ஒரு புள்ளியில் சந்திக்கும் போது கேந்திரன் வி  இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது …! ஆர்ட் டைரக்டர் சசிகுமார்,அவர் உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது ..,இமான் இசையில் பாடல்கள் கேட்கலாம் பின்னணி இசை அருமை, ஒளிப்பதிவாளர் பிரசன்னா s குமார் கிராமிய சூழலை கண் முன் அழகாக காட்சி படுத்தி உள்ளார் ..!

மொத்தத்தில் இந்த வடம் தென் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மஞ்சுவிரட்டு அதை சார்ந்த திரைக்கதை அதை மக்களுக்கு கொண்டு சேர்ந்ததில் மொத்த படக்குழுவுக்கும் நம்மதமிழ் ப்ரைம் நியூஸ்பாராட்டை தெரிவிக்கிறது …!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.6/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *