ஓ பட்டர்பிளை திரைவிமர்சனம்
ஓ பட்டர்பிளை
நடிப்பு: அதுல், சிபி சந்திரன், நிவேதிதா, லட்சுமி பிரியா, கீதா கைலாசம், நாசர் தயாரிப்பு: வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல்
இசை: வைசாக் சோமநாத் ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன் இயக்கம்: விஜய் ரங்கநாதன் பிஆர்ஓ : ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

கதை open பண்ணா ….!
கணவனை இழந்த கைம்பெண்ணான நிவேதிதா சதிஷ், மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ள தீர்மானிக்கிறார். இந்நிலையில் இளம் வயதிலே துறவறம் போன அக்கா நன் உடை தறித்த லட்சுமி பிரியா அவரை சமாதானப்படுத்துகிறார். ஆனால் தன் கணவரை நான்தான் கொலை செய்தேன் என்று நிவேதிதா சதீஷ் அடிக்கடி கூறி அதிர்ச்சியளிக்கிறார். அவர் அப்படி சொல்வது ஏன்?, அவரது கணவர் இறப்பின் உண்மை பின்னணி என்ன ? படத்தின் flashback மூலம் கதை நம் கண் முன்னே விரிகிறது ..!

நிவேதிதா, அதுல் தம்பதிகள் ஹனிமூனுக்கு வெளியூர் செல்கின்றனர். சென்ற இடத்தில் நிவேதிதாவின் முன்னாள் காதலன் சிபி சந்திரன் வருகிறார். முன்னாள் காதலனை கண்டதும் நிவேதிதா அதிர்ச்சி அடைகிறார். கணவன் மற்றும் முன்னாள் காதலன் இடையே சிக்கித் தவிக்கும் நிவேதிதா என்ன முடிவு எடுக்கிறார்? கணவன், முன்னாள் காதலன் செய்தது என்ன? நிவேதிதா மனம் மாறுகிறாரா ..? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சாதாரணமாகவே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் ஏமாற்றிய முன்னாள் காதலன், மறுபக்கம் கணவர் என்று இரண்டு பேருக்கும் நடுவே அவர் தவிக்கும் இடத்தில் தன் நடிப்பை அற்புதமாக வெளிபடுத்தியிருக்கிறார். நிவேதிதாவின் முன்னாள் காதலராக நடித்திருக்கும் சிபி சந்திரன், கணவராக நடித்திருக்கும் அதுல் இருவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் பட்டர்பிளை வளர்ப்பதும் அதனோடு பேசுவதும் என்று படத்திற்கு பெரும் அடையாளமாக நாசர் பயணப்பட்டிருக்கிறார்.

வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் விஜய் ரங்கநாதன், அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதையும், ஒரு உயிர் போவதற்கு காரணமாக இருக்கும் சம்பவமே, மற்றொரு உயிர் பிழைப்பதற்கும் காரணமாக அமையும், என்ற தத்துவத்தை காட்சிகள் வாயிலாக விவரித்திருக்கிறார்.ஓ பட்டர்பிளை படம் சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும் ..அதில் ஒரு புதுமையை புகுத்தி சோடாபுட்டி கண்ணாடி கிழவி சொல்லும் கருத்து மூலம்மாறுபட்ட படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு பாலு மஹேந்திராவை நினைவு படுத்தும் விதத்தில் கண்களை கொள்ளை கொள்கிறது ..மொத்தத்தில்
“ஓ பட்டர்பிளை“சினிமா ரசிகர்களுக்கு சைக்காலஜிக்கல் திரில்லர் விருந்து ..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.4/5

