Fourth Floor திரைவிமர்சனம் ரேட்டிங் 3.5/5

Fourth Floor திரைவிமர்சனம் ரேட்டிங் 3.5/5

  4த் ஃப்ளோர்  ( போர்த்  ஃப்ளோர்)

நடிப்பு : ஆரி அர்ஜுனன்,  தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், சுப்பிரமணியம் சிவா    தயாரிப்பு:A ராஜா   இசை: தரண் குமார்   ஒளிப்பதிவு: ஜெ லக்ஷ்மன்

இயக்கம்: எல் ஆர் சுந்தர பாண்டி     பிஆர்ஓ: A ராஜா

கதைopen பண்ணா ….! :

சென்னையின் ஒதுக்குப்புறம் காட்டுப்பகுதியில்  இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலரும் காலி செய்திருந்த நிலையில்  தன் காதலியின் அழைப்பை ஏற்று கணனி தொழில்நுட்பத்துறையில் வேளைபார்க்கும் ஆரி அர்ஜூன் மும்பையிலிருந்து மாற்றுதலாகி சென்னைக்கு வருகிறார். சென்னையில் உள்ள இந்த ஒரு அடுக்குமாடி குடியிறுப்பிலுள்ள 4வது தளத்திலிருக்கும் ஒரு  வீட்டில் குடியேறுகிறார்.  அவரை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வரவேற்கிறார்கள் தன்னை அழைத்த  காதலியை காணாததால்  அவரை தேடுகிறார் ஆரி ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அந்த வீட்டில்  அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.

ஒருநாள் தன்னை காப்பாற்றும்படி அவரின் முன்னால் காதலியிடமிருந்து ஆரி அர்ஜூனனுக்கு ஒரு அழைப்பு வருமிறது. அதெ நேரத்தில் இரவு நேரங்களில் அவர் தங்கியிருக்கும் வீட்டில் சில தீயசக்திகளின் நடமாட்டமும் நிகழ்கிறது. இதனால் திகி டைந்த ஆரி, தனது முன்னால் காதலியை தேட துப்பறிகிறார்.எதற்கும் பயப்படாமல் தனது காதலி என்னவானார், காதலிக்கும் அவர் குடியிருக்கும் வீட்டுக்கும் என்ன தொடர்பு? அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை ஆரி அர்ஜுனன்   எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை திகிலூட்டும் விதமாக பல மர்மங்கள் நிறைந்ததாக படமாக்கியிறுக்கிறார் இயக்குநர் எள்.ஆர்.சுந்தர பாண்டியன்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் திகிலால் நிறைந்திருக்கிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்துவரும் இயக்குநரை கைத்தட்டி வரவேற்கலாம். ஆரி அர்ஜூனன் துப்பறியும் காட்சிகளில் அவரின் இரு விழிகளும் புருவத்தின் நெருடலும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. உணர்சிகளுக்கு தனி உருவம் கொடுத்து நடித்திருக்கிறார் ஆரி அர்ஜூன். நாயகிகளான தீப்ஷிகாவும் பவித்ராவும் தராசின் இருதட்டுகளும் சமநிலையிலிருக்கும் விதத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறர்கள். அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தையும்,  இரவின் ஈரப்பத விழிகளில் தீப்பொறி பறக்க செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் லட்சுமணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனிதர் கேமிராவின் கண்களோடு விளையாடியிருக்கிறார்.

திகிலுக்கு துணைபோயிருக்கிறார் இசையமைப்பாளர் தருண்குமார். அமானுஷிய சக்திகளுக்கு வில்லன கதாபாத்திரம் ஈடுகொடுக்க நடித்திருக்கிறார் வில்லன் சுப்பிரமணியம் சிவா.லட்சம் பேய் படங்கள் அமானுஷ்ய காட்சிகள் நாம் பார்த்திருந்தாலும் இந்த படத்தின் கதையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டி “4த் ஃபுளோர் ரசிக்க மிரள வைக்கிறது …!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.4/5

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *