ஆழி திரைவிமர்சனம் ரேட்டிங் 3.4/5
ஆழி
நடிப்பு: சரத்குமார், இந்திரஜித் ஜெகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மவுன்கல் வர்கீஸ், தீனா பாட்டியா
தயாரிப்பு: சஜித் கிருஷ்ணன் இசை: வில்லியம் பிரான்சிஸ் ஒளிப்பதிவு :ஆனந்த் என் ராய் இயக்கம்: மாதவ் ராமதாசன் பிஆர்ஓ: நிகில் முருகன்
கதை open பண்ணா ….!
கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் மூர்த்தி என்கிற பெயர் கொண்ட சரத்குமார் நாகர்கோவிலில் போதை மருந்துகள் போன்ற திரை மறைவு வேலைகள் செய்யவராக இருக்கிறார்.மீன்பிடி படகுகளின் பழுது நீக்கும் தொழிலை செய்யும் சரத்குமார், போதைப் பொருட்கள் கடத்தும் குற்ற வேலையையும் மறைமுகமாக செய்து வருகிறார். சரத்குமாரின் மகளாக தேவிகா சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் இந்திரஜித்தை காதலிக்கிறார்.அந்த ஜோடி ஊரெல்லாம் சுற்றி திரிந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியாக உள்ளனர் உள்ளனர் ..

இதை யாரோ புகைப்படம் வீடியோ எடுத்து சரத்குமார் செல்லுக்கு அனுப்பி விடுகிறார்கள். அதைப் பார்த்தவர் கொதித்து எழுகிறார் .எழுந்தவர் இந்திரஜித் ஜெகஜித்தை தனியே வரும்போது துரத்தி அடித்து மயக்கம் அடையச் செய்து கடத்திக்கொண்டு சென்றவர் நடுக்கடலில் பெரிய மீன்பிடிப்படகில் ஐஸ் அறையில் ஒளித்து வைக்கிறார்.மயக்கம் தெளிந்து இந்திரஜித் தப்ப முயன்ற போது அவரை அடித்துத் துவைக்கிறார்.சரத்குமாரிடமிருந்து இந்திரஜித் தப்பித்து உயிருடன் கரை சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.
படத்தின் முழுக்கதையையும் கடலுக்குள்ளேயே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மீன்பிடி படகு, அதில் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான மனம் மற்றும் உடல் ரீதியான போராட்டங்களை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தை இயக்குநர் மாதவ் ராமதாசன் கடத்தியிருக்கிறார்.


வழக்கமான பாசக்கார அப்பா ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் கொடூரமான வில்லன், என்று சரத்குமார் ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தின் சாயல் இருப்பதால், அதிக தலைமுடி, ஒட்டு தாடி என்று தோற்றத்தில் வேறுபாட்டை காட்டியிருக்கிறார். இந்திரஜித் ஜெகஜித், வித்தியாசமான தோற்றத்தில், மரண பயத்தை காட்டிய காதலியின் தந்தை சரத்குமாரிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் விறுவிறுப்பின்றி நிதானமாக இருக்கிறது.
தேவிகா சதீஷ்க்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். வையாபுரி, ஸ்ரீஜித் ரவி,, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா ஆகியோர் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி கதாபாத்திரங்களோடு ஒன்றியிருக்கிறார்கள். ஆனந்த் என்.நாயரின் ஒளிப்பதிவு கடலின் சீற்றத்தை தாண்டி ஆங்கில படத்துக்கு இணையாக நம்மை கதையோடு ஒன்றி போகும் வகையில் படம்பிடித்திருக்கிறார் ..
மொத்தத்தில் இரு துருவ அன்புக்கு இடையே காதல் நடத்தும் கண்ணாமூச்சி இந்த “ஆழி”..படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.4/5

