தாய் கிழவி திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5
தாய் கிழவி
நடிப்பு: ராதிகா சரத்குமார், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபகா
தயாரிப்பு: சுதன் சுந்தரம், சிவகார்த்திகேயன் (பேஷன் ஸ்டுடியோஸ் அண்ட் சிவகார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன் ) இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார் இயக்கம்: சிவகுமார் முருகேசன் பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

கதை open பண்ணா ….!
மதுரை அருகே படிப்பறிவு அதிகம் பெறாத மக்கள் வாழும் அந்த கிராமத்தில் தாய் கிழவி பவுனுத்தாயி ஒரு முரட்டு கிழவியாக வலம் வருகிறார். அவரைக் கண்டாலே ஊரே அலறுகிறது. வட்டிக்கு பணம் கொடுத்து தினம் வசூல் செய்ய கிளம்பும் கிழவியக் கண்டு ஊரே நடுங்குகிறது எதையும் தன் கையில் இருக்கும் குடை கம்பால் அடித்து கேட்கும் தடாலடி தாய் கிழவியான பவுனுத்தாய் திடீரென்று உடல்நிலை பாதித்து படுக்கையில் சாய்கிறார். அவருக்கு மூன்று மகன்கள் அவர்களுக்கு திருமணம் ஆகி மருமகள்களோடு வாழ்ந்து வருகிறார் ,,கிழவிக்கு ஒரே மகள் மருமகன் 3 பவுன் குறைவாகிவிட்டது என்று சொல்லி மகளை கிழவி வீட்டிலே வாழாவெட்டியாக விட்டு செல்கிறான் முதல் மகன் சிங்கம் புலி சவுண்ட் சர்வீஸ் வைத்து வாழ்க்கையை நடத்துகிறார் இரண்டாவது மகன் அருள் தாஸ் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் மூன்றாவது மகன் பால சரவணன் பூக்கடை வைத்து தன் பிழைப்பை நடத்துகிறார் … தாய்கிழவியிடம் இருக்கும் காரை வீடு சொத்து நகை பணம் இவற்றை பிரித்துக் கொடுத்தால் தாங்கள் தாய்கிழவியை பார்த்துக் கொள்வதாக கூற தாய்க்கிழவி அவர்களை அடித்து விரட்டுகிறார் இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தாய் கிழவி தன் கை கால் இழுத்துக் கொள்ள நினைவு மட்டும் தப்பாத ஒருவித கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறார் அதைக் கேட்டு ஊரே குஷியில் ஆழ்கிறது. ஊரே கிழவி சாவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக ஊரே அமர்க்களப்படுகிறது
இந்த சூழ்நிலையில் சவுண்ட் சர்வீஸ் நடத்தும் மூத்த மகன் சிங்கம்புலி கமலஹாசன் பாடல்களை போட்டு அவர் கமல் ரசிகன் என்பதை நமக்கு உணர்த்துகிறார் அங்கு ஊருக்குள் இருக்கும் ரஜினி ரசிகர்கள் சிங்கம்புலி இடம் மல்லுக்கட்டி ரஜினி பாடலை போடச் சொல்கிறார்கள் அதற்கு சிங்கம் புலி நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து கமல் ரஜினி நடித்த படத்திலிருந்து பாடலை போடுகிறார் இப்படி படத்தில் மசாலா கலந்த காமெடி காட்சிகள் தூக்கலாக இருக்கிறது மதுரை பாஷையில் அவர்கள் செய்யும் லந்து தியேட்டரை அதிர வைக்கிறது ..!

ஹீரோயின் ராதிகா என்றாலும் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் யதார்த்தமாக தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளார்கள் அடல்ட் ஏ வசனங்கள் ஆங்காங்கே அள்ளி தெளித்து திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர் குறிப்பாக ராதிகா பேசும் கெட்ட கெட்ட வார்த்தைகள் அந்த கிராமங்களில் சகஜமான வார்த்தைகள் அவை கதையோடு பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது குறிப்பாக மருமகனாக வரும் முத்துக்குமார் பென்னிகுவிக் என்னும் கதாபாத்திரத்தில் வரும் முனீஸ் காந்த இடம் ஒரு முக்கிய காட்சியில் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டு நான் சொன்ன வேலையை செய்யாவிட்டால் உன்னுடைய 21 விரலையும் வெட்டி விடுவேன் என்று சொல்வது அல்டிமேட் காமெடி ..!
இதுபோல படம் முழுவதும் காமெடி பொரியலை தூவி சென்றுள்ளார் இயக்குனர் குறிப்பாக கருப்பசாமியிடம் வரம் கேட்கும் ஒரு கேரக்டர் அதற்குப் பின்னணி இசை குஷி படத்தில் விளக்கு அணையாமல் இருவரும் ஓடி வந்து பாதுகாப்பது ராக்ஸ்…
ஒரு கட்டத்தில் தாய்க்கிழவியிடம் கோல்டு குமார் என்பவர் நகைச்சீட்டு தாய்க்கிழவி போட்டு வந்ததாகவும் அப்படி அவர் சேர்த்த நகை 160 பவுனுக்கு மேலாக இருக்கும் என்றும் ஒருவித கணக்கை காட்டிவிட்டு பென்னிகுவிக் மூலம் மகன்களை மிகப்பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்ற அந்த சூழல் உதவுகிறது அந்த 160 பவுன் நகை அந்த மூன்று மருமகளும் கிழவியின் மகளுக்கு கிடைக்காமல் தாங்களே கைப்பற்றிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் நகைச்சுவை விருந்து அதற்காக தங்கள் கணவர்கள் சொல்லும் அவ்வளவு வேலைகளையும் செய்கிறார்கள் …!
கடைசியில் அந்த 160 பவுன் நகை அவர்களுக்கு கிடைத்ததா தாய்க் கிழவி என்ன ஆனாள் …! அனைத்தையும் இரண்டாம் பகுதியில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக கதை ஓட்டத்துடன் சொல்லி இருக்கிறார் தாய்க்கிழவி அந்த வீட்டில் இருக்கும் பெண்களை தாயக்கட்டைகள் விளையாடும் விளையாட்டை வைத்து பெண்கள் தங்கள் வீட்டை எப்படி நிர்வாகிக்க வேண்டும் என்பதை சில நிமிடங்களில் சொல்லி புரிய வைப்பது பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து …!
40 வயதுக்கு மேல் திருமணம் ஆகாமல் இருக்கும் பென்னிகுவிக் தான் ஏன் திருமணம் செய்ய வேண்டும் இந்த ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காட்சி கண்கலங்க வைக்கிறது … அதேபோல தாயை கவனிக்காத பிள்ளைகள் உணர பால சரவணன் ஆம்புலன்சில் நடைபெறும் ஒரு காட்சி மூலம் பெற்ற தாயை கவனிக்காத பிள்ளைகளுக்கு அது ஒரு பாடம் ….!

இயக்குனர் சிவக்குமார் முருகேசன் ஆனால் பாடம் எடுக்க வரவில்லை படிப்பினை கொடுத்துள்ளார் நகைச்சுவை கலந்து தாய்க்கிழவி மூலம் குடும்பங்களுக்கு பாடம் நடத்தியுள்ளார் இதுபோல சிறிய பட்ஜெட் படங்கள் அதிகம் வர வேண்டும் அதை மக்கள் வரவேற்க வேண்டும் இதற்கு சிவகார்த்திகேயன் முன்னெடுப்பு செய்வதற்கு வாழ்த்துக்கள் மாபெரும் படமாக தாய் கிழவி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ராதிகா அவர்களுடைய நடிப்பில் இது ஒரு மைல் கல் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் குறிப்பாக முத்துக்குமாரின் பையனாக வரும் நபர் மதுரை பக்கம் பேசும் எதார்த்தமான பேச்சு அப்பனை பேசுவது ரசிக்க வைக்கிறது தன்னுடைய அம்மா தாய்க்கிழவி முற்போக்கு சிந்தனையுடன் மகளுக்கு மறுமணம் செய்வது பொட்ட புள்ளைங்க எப்படியாவது படித்து விட மாட்டாங்களா அப்படின்னு ஆசைப்படுறது அது எல்லாம் இப்படி ஒரு தாய்க்கிழவி இருக்க மாட்டாங்களா அப்படின்னு ஏங்க வைத்துள்ளார் இயக்குனர் சிவக்குமார் முருகேசன்…!
மொத்தத்தில் தாய்க்கிழவி படக்குழு அனைவருக்கும் இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல தேசிய விருதுக்கான வெற்றி என்பதை நம்ம தமிழ் ப்ரைம் நியூஸ் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்..!

விமர்சனம் : ராம்
tamilprimenews.com
தமிழ் பிரைம் நியூஸ் ரேட்டிங் 4.1 /5

