‘மார்கன்’ட்ரெய்லர் வெளியீட்டு விழா

‘மார்கன்’ட்ரெய்லர் வெளியீட்டு விழா
பிரபல சூப்பர் ஹிட் படங்களின் எடிட்டர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்துள்ள படம் ‘மார்கன்’.
இதில் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷான் என்பவர் வில்லனாக நடித்திருக்கிறார்.. இது இவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது..
விறுவிறுப்பான இன்வஸ்டிகேஷன் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.
விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, பிரிகிடா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தனஞ்ஜெயன் பேசும் போது…
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தரமான படங்களை கொடுத்து வருகிறது.. விஜய் ஆண்டனி தயாரித்த படங்கள் எதுவும் அவருக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை.. நல்ல லாபத்தையே கொடுத்து வந்துள்ளது. எனவே மார்கன் படமும் நல்ல வெற்றியை கொடுக்கும்.
சமீபத்தில் சூரி நடித்த மாமன் படம் ரிலீசானது.. நான் படம் பார்த்தேன்.. இந்த படம் ஓவர் எமோஷனலாக இருப்பதால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது.. ஆனால் சூரி கதை மீது நம்பிக்கை வைத்து தைரியத்துடன் ஒவ்வொரு தியேட்டராக விசிட் செய்து வந்தார். இவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் என்று நான் நினைத்தேன்.
ஆனால் சூரி நம்பிக்கை பாராட்டுப்படி அமைந்துவிட்டது.. மக்களும் படத்தை ஏற்றுக் கொண்டார்கள்.. படமும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.. அதுபோல மார்கன் படத்திற்கும் நம்பிக்கை வைத்து விஜய் ஆண்டனி நல்ல ப்ரொமோஷன் செய்ய வேண்டும்.. அப்பொழுது படம் மாபெரும் வெற்றி பெறும்” என தனஞ்செயன் பேசினார்..
இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனி..
நான் தொடர்ந்து படங்களை தயாரித்து வருவதால் என்னிடம் நிறைய பணம் இருப்பதாக நினைக்கிறார்கள் ஆனால் எனக்கு நிறைய கடன்கள் இருக்கிறது அதற்கு நான் வட்டியும் கட்டி வருகிறேன்.
இந்தப் படத்தின் இயக்குனர் லியோவை எனக்கு அவர் எடிட்டராக இருக்கும் போதே தெரியும்.. அவரது பணிகள் சிறப்பாக இருக்கும்.. நான் செய்த தவறை அவர் செய்யக்கூடாது நான் இசையமைப்பாளராக இருந்து பின்பு நடிகனாக மாறிவிட்டேன். என்னால் மீண்டும் இசையமைக்க வாய்ப்பு நேரம் இல்லை.. தற்போது மீண்டும் இசையமைக்க உள்ளேன்..
லியோ தற்போது இயக்குனராக மாறிவிட்டார்.. ஆனாலும் அவர் தன்னுடைய எடிட்டர் பணியை விடக்கூடாது..” என நான் சொல்லிக் கொள்கிறேன்..
2006 டிஷ்யூம் படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சசி.. அதன் பிறகு 2016 இல் பிச்சைக்காரன் படத்தில் நாங்கள் இருவரும் பணிபுரிந்தோம். தற்போது 2026 ஆம் ஆண்டில் எங்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது..
நான் ஜாதி மதம் பார்ப்பது கிடையாது.. ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும் என நினைப்பவன்.. எல்லா மனிதர்களிடம் ஒரு ஆற்றல் இருப்பதை நம்புவேன்.. பிச்சைக்காரன் சலீம் உள்ளிட்ட படங்களில் ஆன்மீக அம்சங்கள் வந்துவிட்டது..
இதுவரை என் படங்களை மட்டுமே தயாரித்தேன்.. என்னுடைய பொருளாதாரத்தை பொறுத்து மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்க இருக்கிறேன். மற்ற நடிகர்களும் படங்களுக்கும் இசையமைப்பேன்.” என்று பேசினார் விஜய் ஆண்டனி..
மேலும்…“சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் பிரச்சனை தெரியாமல் நடந்தது. அவர்களுக்கு நான் அந்த டைட்டிலை வைத்திருந்தது தெரியாது;
ஆனால் தயாரிப்பாளரின் நிலையை உணர்ந்து அன்பின் காரணமாக ‘பராசக்தி” டைட்டிலை விட்டுக் கொடுத்தேன்” என்றார்..!