மாமன் திரைவிமர்சனம் ..Rating 3.8/5 

மாமன் திரைவிமர்சனம் ..Rating 3.8/5 

படம்: மாமன்

நடிப்பு: சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், நிகிலா ஷங்கர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ்,

மாஸ்டர் பிரகீத் சிவன்  தயாரிப்பு: கே குமார்  இசை: ஹேசம் அல்துல் வஹாப்  ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்  இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ்  பி.ஆர் ஒ : யுவராஜ்

 

கதை .. open  பண்ணா …

சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு தம்பி என்றால் உயிர். அதே மாதிரி தம்பியும் அக்காவை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான். இந்த அக்காவுக்கு பத்து வருடத்திற்கு பிறகு பிறந்த பையனை தாய் மாமன் சூரி தாங்குதாங்கென்று தாங்குகிறார். பெற்ற தந்தையையே மகனின் அன்புக்கு ஏங்க வைக்கும் அளவுக்கு மாமன் மருமகன் பாசம்  அக்கா-தம்பியின் அளவு கடந்த பாசம் தம்பியின் இல்லற வாழ்க்கையையே பாதிக்க நேர்ந்தால்….அதுதான் இந்த மாமன் கதை.

கிராமங்களில் தாய் மாமன் உறவு உன்னதமானது. அப்படி ஒரு மாமனை திரைக்கு தந்து இருக்கிறார்கள். 10 வருடமாக குழந்தை இல்லாமல் மலடி என்கிற அவமானத்தை மட்டுமே வெகு மானமாக பெற்றுக் கொண்டிருந்த தனது அக்காவுக்கு இப்போது மகன் பிறக்கிறான். தூங்கும்போது கூட மாமனை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் அந்த சிறுவன், அதே மாமனுக்கு திருமணம் ஆகும்போது,அக்காவின் பிரசவத்துக்காக ஹாஸ்பிடல் போன இடத்தில் அங்கிருந்த இளம் பெண் டாக்டர் ஐஸ்வர்ய லட்சுமி அக்காவையும் அவள் குடும்பத்தையும் இப்படி நேசிக்கும் ஒருவன் நமது வாழ்க்கைத் துணையானால் நம்மிடமும் அதே அன்பை கொட்டுவான் என்று நம்புகிறாள். அந்த நம்பிக்கையே அவன் மீது காதலாகவும் மாறுகிறது.   அனைவரின்  சம்மதத்துடன் திருமணம். . கணவன் மனைவி இருவருக்குள் இந்த பையன் மாமா பாசம் என்கிற போர்வையில் அவன் செய்யும் சேட்டைகள்..! .முதல் இரவில் தான் பிரச்சனை. நானும் மாமன் கூடவே படுத்துக் கொள்வேன் என்று அடம் பிடிக்கும் அக்கா மகன் அடுத்தடுத்த  இரவுகளில் புதுப் பெண்ணை எரிச்சலுக்கு உள்ளாக்க…இதனால் மதுரைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு கணவருடன் ஐஸ்வர்யா இடம் பெயர… அதற்குப் பின்பும் அந்த மாமா மருமகனின் அதீத பாசம் இருவர் குடும்பத்திலும் விரிசலை ஏற்படுத்த…இதற்கிடையே ஐஸ்வர்யாவும் தாய்மை அடைய….மாமனைப் பிரிந்து வாடும் மகனை அந்தப் பிரிவில் இருந்து மீட்டெடுக்க சுவாசிகா செய்யும் விபரீத செயல் இரு குடும்பங்களுக்குள்ளும் பெரும் பிளவை ஏற்படுத்தி விடுகிறது…பிரிந்த குடும்பம் இணைந்ததா?இந்த மோதலுக்கு முடிவு ஏற்பட்டதா? சூரி  அக்கா மகன்  பாசம் என்னவானது?  என்பதற்கு உருக்கமாக பதில் அளிக்கிறது மாமன்.

சூரியின் காதல் மனைவியாக ஐஸ்வர்ய லட்சுமி அன்பிலும் ஆவேசத்திலும் இருவேறு நிலைகளை நடிப்பில் அற்புதமாக பிரதிபலிக்கிறார். அவரது பேசும் கண்களில் தான் எத்தனை எக்ஸ்பிரஷன்கள்… அக்கா குடும்பத்தின் உறவுக்காக எந்த எல்லைக்கும் போகும் கணவனை புழு போல் பார்க்கும் இடத்தில் நடிப்பிலும் ஐஸ்வர்யா rocks .சூரியின் அக்காவாக வரும் சுவாசிகா தம்பி மனைவியிடம் சண்டைக் கோழியாக எகிறும் இடத்தில் நடிப்பில் விளாசித் தள்ளுகிறார்.

சுவாசிகாவின் கணவர் பாபா பாஸ்கர் மனைவிக்கும் அவள் தம்பிக்குமான பாசப் போராட்டத்துக்கிடையே அல்லாடும் கேரக்டரை அழகுற செய்து இருக்கிறார்
தாத்தா பாட்டியாக ராஜ்கிரண் -விஜி சந்திரசேகர் பாத்திரப் படைப்பு கிராமத்து எதார்த்த வார்ப்பு. இறந்து போன மனைவியை அவள் தூங்குகிறாள் என்று ராஜ்கிரண் சொல்லும் இடத்தில் துவளாத மனமும் துவளும்.மகள் வீட்டில் மகன் போட்டோவை சாமி கோலத்தில் பார்த்த தும் உடைந்து நொறுங்கும் அம்மா கேரக்டரில் கீதா கைலாசம்… மகள் கோபத்தில் தாய் வீடு வந்த நேரத்தில் மாமா ஜெயப்பிரகாஷ் மருமகன் சூரியை சந்தித்து பேசும் இடம் டைரக்டர் டச் தெரிகிறது ….

ஹே ஷாம் அப்துல்லாவின் இசையும் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் இந்த பாசக் கதையின் பக்கத் தூண்கள். சூரிக்கு ஏற்ற குடும்ப  திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

 

சூரி தனித்து ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம் மாமன். ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த விடுதலை, கருடன் போன்ற படங்களில் விஜய் சேதுபதி, சசிகுமார் போன்ற ஹீரோக்கள் நடித்து அவருக்கு கைகொடுத்திருந்தனர். இந்த படத்தில் விமல் சிறிய ரோல் செய்தாலும்… சூரி மொத்த நடிப்பையும் காட்டி தானும் இனி ஹீரோ meterial  தான் என்பதை ப்ரூஃப் பண்ணி உள்ளார்…! மாமன் படக்குழவிற்க்கு பாராட்டுக்கள் ..!

குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம் …மாமன் கண் கலங்க வைத்து விட்டான் ..!

நம்ம tamilprimenews.com Rating 3.8/5 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *