அகத்தியா திரை விமர்சனம்

அகத்தியா திரை விமர்சனம்

படம்: அகத்தியா

நடிப்பு: ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, யோகி பாபு, செந்தில், எட்வின், மெட்டில்டா, தயாரிப்பு: ஐசரி கணேஷ் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: தீபக் குமார்

இயக்கம்: பா. விஜய் பிஆர்ஓ: நிகில் முருகன் வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கதை .. open பண்ணா …

சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, புதிய படத்தின் படப்பிடிப்புக்காக பல  லட்சம் செலவழித்து அரண்மனை செட் போடுகிறார். செட் வேலை முடிந்த நிலையில் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட, செட்டுக்காக போட்ட பணத்தை திரும்ப எடுக்க அந்த செட்டை ராசி கண்ணா வின்  ஐடியா படி     திகில் பங்களா வடிவில் மாற்றியமைத்து அதில் பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்கிறார்கள். ஒருநாள் அந்த அரண்மனை செட்டிற்குள் உள்ளே சென்ற காதல் ஜோடி ஒன்றில் காதலன் மாயமாகி விட, செட்டை இழுத்து மூடுகிறது அரசாங்கம்…ஏற்கனவே குணப்படுத்த முடியாத நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயை நினைத்து கவலையாக இருக்கும் ஜீவா அதிர்ச்சியாகிறார்.இந்த சமயத்தில், அரண்மனை செட்டிற்கு கீழே ஒரு சுரங்கம் இருப்பது தெரிய வர, அங்கு சென்று பார்க்கையில் அங்கே அதிர்ச்சிகரமான பல அமானுஷ்யங்களின் செயல்பாடுகள்  மேலும் அதிர்ச்சி தருகிறது.

உண்மையில் அந்த அரண்மனையில் இருக்கும் அமானுஷ்ய சக்தி தன்னிடம் ஏதோ கூற வருவதை உணர்கிறார் ஜீவா. அங்கே கிடைத்த பழைய படச் சுருளும்  அதை உறுதி செய்கிறது. .பட சுருளை  ஓட்டி பார்க்க   இப்போது 1940-க்கு கதை நகர்கிறது. சித்த மருத்துவத்தில் தேர்ந்த அர்ஜூனுக்கும் இந்த அரண்மனைக்கும் உள்ள தொடர்பு காட்சியாக வருகிறது.

முந்தைய காலகட்டத்தில் இதே வெள்ளைக்கார அதிகாரிக்கு அவரது தங்கையை குணமாக்குவதற்காக அர்ஜுன் சித்த மருத்துவம் செய்து சிகிச்சை அளிக்கிறார். எலும்புருக்கி நோயான கேன்சருக்கும் அர்ஜுன் மருந்து கண்டுபிடிக்க முனையும்போது அவர் கொல்லப்படுகிறார். வெள்ளைக்கார பேய் எட்வின் ஜீவாவை துரத்தி அடிப்பது ஏன்?சித்த மருத்துவர் சொல்லவரும் செய்தி இப்போது ஜீவா மூலம் வெளிப்பட என்ன காரணம் . என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

தாய்க்காக உருகும் ஜீவா, திகில் அரண்மனைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு ஆவிக்கெல்லாம் பயப்படாமல் அடுத்தடுத்து எடுக்கும்  முயற்சிகள் திகிலுக்கு மட்டுமல்ல அவரது நடிப்புக்கும் உத்தரவாதம்.பிளாஷ் பேக்கில் முழுக்க அர்ஜுன் ஆக்கிரமிக்கிறார் இவருக்கும் வெள்ளைக்கார அதிகாரியின் தங்கைக்குமான காதல் காட்சிகள் ரசனை மிக்கவை. வில்லனாக நடித்த எட்வர்ட், அப்பாவாக நடித்த சார்லி, அம்மாவாக நடித்த ரோகிணி தங்கள் பாத்திரங்களை நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள் .. .ஜீவாவின் நண்பராக வரும் சாரா சிரிக்க ரசிக்க  வைக்கிறார். சின்ன கேரக்டரிலும் வெள்ளைக்கார அதிகாரியின் எடுபிடியாக வந்து அரசியல் நையாண்டி கலந்து  ரசிக்க வைக்கிறார் ராதா ரவி. செந்தில், யோகி பாபு, பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, வி டி வி கணேஷ் தங்கள் பாத்திரங்களை நடிப்பால் தாங்குகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பேண்டஸி படம் என்பதால் பேய் இருந்தாலும்.. காலத்துக்கு தக்கவகையில் காட்சிகளையும் கலர்ஃபுல்லாக செய்து கண்களுக்கு வண்ண விருந்து படைத்திருக்கிறார்… படத்தில்  குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் அம்மா பாட்டு நெஞ்சுக்குள் பூங்காற்று…பாடல்  அருமை. குறிப்பாக சித்த வைத்திய பாடல் பல நோய்களுக்கும் மூலிகை மருந்துகளை பாடல் வரிகளிலேயே சொல்வது பலருக்கு பலன் தரும்… இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே பாட்டு’ ரீமிக்ஸ்சிலும் அமர்க்களம் செய்திருக்கிறார் ..சித்த மருத்துவ சிறப்பை சொல்வதற்கு எடுத்துக் கொண்ட கதைக் களத்தில் காதல், நட்பு ,துரோகம், அம்மா பாசம் ஆகியவற்றையும் இணைத்து சொன்ன விதத்தில் பா. விஜய் நல்ல இயக்குனராகவும் இந்த படம் அடையாளம் காட்டுகிறது ..!

மொத்தத்தில் அகத்தியா  திகில் வைத்தியர்

நம்ம tamilprimenews.com ரேட்டிங்  3.6/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *