ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி!”சிங்கா நல்லூர் சிக்னல்” படத்தின் பூஜையில் நடிகர் பிரபுதேவா!

ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி!”சிங்கா நல்லூர் சிக்னல்” படத்தின் பூஜையில் நடிகர் பிரபுதேவா!

முத்தமிழ் பதிப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிராபகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி எனடர்டெயினராக உருவாகும் “சிங்கா நல்லூர் சிக்னல்” படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது.

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி எனடர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன் சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபுதேவா நடித்த “உள்ளம் கொள்ளை போகுதே” படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வினில்…

முத்தமிழ் பதிப்பகம் சார்பில் AJ பிரபாகரன் பேசியதாவது…
எங்களது லேபிள் படைப்புக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், வரவேற்பிற்கும் நன்றி. லேபிள் வெற்றியைத் தொடர்ந்து, ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்கும் நோக்கத்தில், இப்படத்தை உற்சாகமாகத் துவங்கியுள்ளோம். இப்படத்தில் நடனப்புயல் பிரபு தேவா அவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். அவர் ஆடினால் ரம்பா, ஊர்வசியே மயங்குவார்கள், நாமும் மயங்குவோம். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் கனவு. இயக்குநர் JM ராஜா இப்படத்தை இயக்கவுள்ளார். இசை ராஜா யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பவ்யா நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீமன் முக்கிய ரோலில் நடிக்கிறார். படம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது…
“சிங்கா நல்லூர் சிக்னல்” படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் நல்ல தமிழில் அழகாகப் பேசினார். இந்தப்படத்தில் புதிய இயக்குநராக JM ராஜாவை அறிமுகப்படுத்துகிறார்கள். திரைத்துறையில் புதிதாகத் திறமையாளர்கள் வருவது நல்லது. இந்தப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

நடிகை பவ்யா திரிகா பேசியதாவது…
முத்தமிழ் பதிப்பகத்திற்கு என் நன்றிகள். வாய்ப்பு தந்த இயக்குநர் ராஜா சாருக்கு நன்றி. பிரபுதேவா சார் உங்களுடன் நடிக்க வேண்டும் டான்ஸ் ஆட வேண்டும் என்பது என் கனவு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ரொம்ப நல்ல டீம், கண்டிப்பாக நல்ல படைப்பைத் தருவோம் நன்றி.

இயக்குநர் JM ராஜா பேசியதாவது…
எல்லா உதவி இயக்குநர் வாழ்க்கை போலத்தான் என்னுடையதும், கையில் பவுண்டோடு சுத்திக் கொண்டிருந்த போது கேமாராமேன் பன்னீர்செல்வம் சார் பிரபு தேவா சாரிடம் கூட்டிப்போனார், என் திரைக்கதையைப் படித்து விட்டு ஒகே சொன்னார் பிரபு தேவா சார். தயாரிப்பாளராக அலைந்தோம், காம்பொ இயக்குநர்களைத் தேடும் சினிமாவில், என்னுடைய கதையை பிரபாகரன் சார் படித்துவிட்டு, ஓகே சொன்னார். மேஜிக் மாதிரி இப்படம் நிகழ்ந்தது. முழுக்க முழுக்க சிரித்து மகிழும் எண்டர்டெயினாராக இப்படம் இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பிரபுதேவா பேசியதாவது…
இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு பர்ஸனலாகத் தெரியும், எல்லோருடனும் படம் செய்துள்ளேன், ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் பற்றி எல்லோரும் சொன்னார்கள், இந்த கம்பெனியில் நாலைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டிக்கொண்டேன். மிக கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள். மிக நல்ல தயாரிப்பு நிறுவனம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *