ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்!’P T சார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹிப் ஹாப் தமிழா!

ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்!’P T சார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹிப் ஹாப் தமிழா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படாமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ‘P T சார்’ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். ஹிப்ஹாப் ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த  நிகழ்வில்,

நடிகை காஷ்மிரா பர்தேஷி பேசியதாவது…
ஒரு வருடம் முன் ஆரம்பித்த படம். ஐசரி சாருக்கு நன்றி. மிக அற்புதமான குழுவினர். எப்போதும் ஷூட்டிங் சந்தோசமாக இருக்கும். கார்த்திக் இப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். ஆதியுடன் இரண்டாவது படம் மிக சந்தோசமாக இருந்தது. மிக மிக ஜாலியானவர் திறமையாளர் அவரது 25 வது படத்திற்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இருக்கும். திரையரங்குகளில் வந்து பாருங்கள் அனைவருக்கும் நன்றி.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி K கணேசன் பேசியதாவது…
வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல ஒஅடம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டு பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும் இறுதியில் மிக முக்கியமான விசயத்தை தைரியமாக செய்துள்ளார்கள். எல்லாப்பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும் நான் படிச்ச பள்ளியில் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர் அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு கொண்டுவரவுள்ளோம். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள் அந்தளவு படம் நன்றாக உள்ளது. ஆதி தான் இந்தப்படத்தின் கதையை கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்கு தான் செய்கிறார். அரண்மனை 4ல் கலக்கியிருக்கிறார். அதே போல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக படம் பிடிக்கும் நன்றி.

Image

நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது…
என் நன்றிகள், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாரட்டுக்களை தந்தீர்கள். மிக மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திபடுத்தும். கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவில்லை, ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமென சொன்னார். அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாக கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *