அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
![அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!](https://tamilprimenews.com/wp-content/uploads/2023/03/334237264_999985194311643_2338043346521181445_n.jpg)
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
தயாரிப்பாளர் சுந்தர் பேசியதாவது,
பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி, எனக்கு இது மிகப்பெரிய பயணம் என்னை நம்பிய ரவி சாருக்கு நன்றி, இந்தப் படத்தை உருவாக்குவது சற்று கடினமாகத்தான் இருந்தது ஏனென்றால் படப்பிடிப்பு முழுக்க துறைமுகத்தில் நடைபெற்றது, சில கப்பல் வருவதற்கும் சில கப்பல்கள் செல்வதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது , ஆனாலும் படக்குழு இதை சமாளித்து, அருமையாக படத்தை எடுத்துள்ளனர். படத்தில் ஸ்டண்ட் குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது, ஒரு காட்சியில் சென்று கொண்டிருக்கும் படகில் ஏற வேண்டியிருந்தது, டூப் போட்டு எடுத்துக் கொள்வோம் என்று சொன்னேன் ஆனால் ரவி சார் தானே அதை செய்தார், இது போன்று பல இடங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார், பிரியா காக்கி சட்டையில் கலக்கியுள்ளார், தான்யா ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சாம் சி எஸ் இசையை பற்றி நான் சொல்லத்தேவை இல்லை படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார், மேலும் படத்தின் மொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
நடன இயக்குனர் ஈஸ்வர் பாபு பேசியதாவது,
முதலில் என் இயக்குனர் கல்யாண் சாருக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் ரவி சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நான் ஜனா சாரிடம் பணிபுரியும்போதிலிருந்தே எனக்கு கல்யாண் சாரின் அபார திறமையை பற்றி நன்கு தெரியும். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. சாம் சி எஸ் ஒரு சிறப்பான இசையை அளித்துள்ளார், நான் பணிபுரிந்துள்ள பாடல் மிகவும் அழகாக வந்துள்ளது, படத்தின் திருப்புமுனையாக இந்தப் பாடல் இருக்கும் இதற்கு நான் ஜெயம் ரவி சாருக்கும் சாம் சி எஸ் சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், ரவி சார் யார் தவறு செய்தாலும் சிரமம் பார்க்காமல் பொறுமையாக வெயிலிலும் கூட நின்று, இந்த பாடலை முடித்துள்ளார், எடிட்டர் கணேஷ் சாருக்கு நன்றி , ஒளிப்பதிவாளர் விவேக் மற்றும் உதவி இயக்குனர் குழு அனைவருக்கும் நன்றி மேலும் ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் நன்றி
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது..
ஒரு படத்திற்கு கதைக்களம் மிக முக்கியம் கதை நடக்கும் இடம் படத்தின் தன்மையை மாற்றும், இந்தப்டத்தில் ஹார்பரில் நாம் பார்க்காத ஒரு வாழ்கையை ஒரு புதிய உலகத்தை காட்டியுள்ளார்கள். கல்யாண் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார். பாடல் சொல்லும் போது கூட இந்த ராகத்தில் போடலாம் என்பார். எனக்கு ராகம் இசை எல்லாம் தெரியாது இப்போது தான் கற்றுக்கொள்கிறேன். ஆனால் இசையை எனக்கு பிடித்த வேலையாக விரும்பி செய்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. ரவி சார் மிக நல்ல மனிதர் அவர் எந்த கதாப்பாத்திரமாகவும் மாறிவிடுவார். இந்தப்படத்திலும் கலக்கியுள்ளார் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது…
எல்லோருமே சொன்னது தான் இந்தப்படத்தில் உழைத்த அத்தனை பேரும் பிடித்து மிக அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளார்கள். பிஸிகலாக எல்லோருமே ரொம்ப கஷ்டப்பட்ட படம். தான்யா உடன் நான் நடிக்கவில்லை ஆனால் அவருக்கு வாழ்த்துக்கள். ஜெயம் ரவி நிறைய உழைத்திருக்கிறார். படம் அட்டகாசமாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது..
இந்தப்படத்தில் அருமையான வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் குழுவிற்கு நன்றி. என் கதாப்பாத்திரத்தை எல்லோரும் ரசிப்பீர்கள். சாம் நல்ல இசையை தந்துள்ளார். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது
20 வருட திரை வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு பாரட்டு நிறைய கிடைத்துள்ளது எப்போதும் நண்பர்களாக இருக்கலாம் என ஆசைப்படுகிறேன். அகிலன் மேக்கிங் ரொம்ப கஷ்டமான படம், இதெல்லாம் கிடைக்குமா ?இதெல்லாம் எடுக்க முடியுமா ? என நினைத்தபோது, தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது. இந்த படத்தை சாத்தியமாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. பாபி மாஸ்டர் பேராண்மையிலிருந்து தெரியும். இயக்குநருடன் இணைந்து பயணித்துள்ளார். விவேக் பிசி ஶ்ரீராம் சாரின் செல்லப்பிள்ளை, அயராத உழைப்பாளி, என் அடுத்த படத்திலும் அவர் தான் ஒர்க் பண்ணுகிறார். சிராக் என் பிரதர், அவருக்கு வாழ்த்துக்கள். பிரியா தமிழ் பேசி நடிக்கும் ஹீரோயின் ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக்கொண்டே போகிறார் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் சுந்தர் சார் சகோதரர் மாதிரி தான் நிறைய படங்கள் சேர்ந்து பயணிக்க போகிறோம். இயக்குநர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விசயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும். இந்தப்படம் நல்லா வந்ததற்கு அவருடைய டீம் தான். தான்யா இந்தப்படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருப்பார். சாம் CS அட்டகாசமான இசை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஜிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு : Screen Scene Media Entertainment Pvt Ltd
இயக்கம் : கல்யாண கிருஷ்ணன்
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : விவேக் ஆனந்த்
படத்தொகுப்பு : N. கணேஷ் குமார்
கலை இயக்கம் : விஜய் முருகன்
உடை வடிவமைப்பு : பல்லவி சிங்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : பூஜா பிரியங்கா
தலைமை விநியோகம் : கிரண் குமார் S
பப்ளிசிட்டி டிசைனர் – தண்டோரா சந்துரு
டீசர் கட்ஸ் : விக்னேஷ் RK
விளம்பரம் & திட்டமிடல் – ஷ்யாம் ஜாக் Jack
மக்கள் தொடர்பு – நிகில் முருக