அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன் – இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி

அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன் –  இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி

சமீபத்தில் வெளியான மைக்கேல் படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், கௌதம் மேனன் நடிப்பில் உருவான மைக்கேல் படத்தை தமிழில் லோகேஷ் கனகராஜ் வழங்கினார். கூடுதலாக இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சாம் சி எஸ் இசையமைத்தார்.

இதுகுறித்து ரஞ்சித் ஜெயக்கொடி வெளியிட்ட பதிவில் , “எனது எல்லா படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று தான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்து இருக்கிறேன்.அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விருப்பத் தேர்வும் மாறுபடவே செய்யும்.

Image

மைக்கேலை ரசித்தவர்களுக்கு நன்றி. மாறுபட்ட கருத்து கொண்ட ரசிகர்களுக்கு அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *