என்ன விலை திரைவிமர்சனம் ரேட்டிங் 3.4/5

என்ன விலை திரைவிமர்சனம்  ரேட்டிங் 3.4/5

என்ன விலை

நடிப்பு: கருணாஸ்நிமிஷா சஜயன், பிரதீப்,சுந்தரம், தர்ஷன,  நிரோஷா, கவி, பாண்டி, சாஷா,     தயாரிப்பு:  ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன்   இசை: சாம் சி எஸ்     ஒளிப்பதிவு: ஆல்பி ஆண்டனி     இயக்கம்: சஜீவ் பழூர்,    பிஆர்ஓ சுரேஷ் சந்திரா ( D’ One ), நாசர்

கதை ஓபன் பண்ணா….!

ராமேஸ்வரத்தில் மீனவராக இருக்கும் கருணாஸ், ராமேஸ்வரம் தீர்த்த கடலில் பக்தர்கள் வீசி எறியும் காணிக்கை காசுகளை கடலில் மூழ்கி எடுக்கும் தொழிலை செய்து வருகிறார். ஒருநாள் அப்படி கடலில் வீசி எறிந்த காசுகளை கருணாஸ் கடலில் மூழ்கி எடுக்கும்போது அவரது கையில் வட்ட வடிவில் கற்கள் பதிக்க பட்ட ஒரு பதக்கம் சிக்குகிறது. அந்த பதக்கத்தை கடற்கரை பூத் காவலரிடம் கொடுக்கிறார். அந்த பதக்கத்தில் பதிக்கப்பட்ட கல்லில் ஒரு கல்லை மட்டும் கருணாசுக்கு தெரியாமல் எடுத்துக்  கொண்டு, இது சாதாரண பதக்கம் என்று பொய் கூறி அந்த பதக்கத்தை கருணாசிடமே திருப்பி  கொடுத்து விடுகிறார்.

மறுநாள் அந்தப் பதக்கத்தை கருணாஸ் காவல் நிலையத்தில் இருந்த இரண்டு காவலர்களிடம் கொடுத்து விடுகிறார். அந்த பதக்கம் நூற்றாண்டை கடந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ளது என்று தெரியவருகிறது. …இதற்கிடையே காவலர் திருடிய அந்த ஒரு பதக்கத்தில் இருந்த கல்லை  மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று மூன்று காவலர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்த மூன்று காவலர்களும், “அந்த பதக்கத்தை கோவிலில் இருந்து கருணாஸ் திருடியதாகவும் அதை மீட்டு காவல் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் திருடிய கருணாசை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகவும் உயர் அதிகாரியிடம் அந்த காவலர்கள் கூறுகிறார்கள்.

செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பப்படும் தவசிக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாட வருகிறார் பெண் வழக்கறிஞர் (நிமிஷா சஜயன்). ஆனால் இந்த வழக்கு வெவ்வேறு கோணத்தில் சென்று தவசியை பெரும் குற்றவாளியாக சட்டத்தின் முன்னிறுத்த முயற்சிக்கப்படுகிறது அதிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா என்பதை கோர்ட் வாத பிரதிவாதங்களுடன் படம் விளக்குகிறது.

தீவிர விசாரணையில் கருணாஸ் நிரபராதி என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்கிறது. ஆனால் “நிரபராதியான என்னை கைது செய்து சிறையில் அடைத்ததால் எனது மானம் போய்விட்டது. எனக்கு நஷ்ட்ட ஈடாக பணம் தேவையில்லை. ஆனால் இழந்த என் மானத்துக்கு என்ன விலை? என்று நீதிபதியிடம் கருணாஸ் கேட்கிறார். அதற்கு நீதிபதியின் தீர்ப்பு என்ன?  என்பதுதான் கதை…!

கருணாஸ் அப்பாவியாக அதே நேரத்தில் நேர்மையான குடும்ப தலைவனாக தன்னை குறி வைக்கும் மீடியாக்களிடம் தப்பிக்க வீட்டுக்குள் ஒளிந்து கொள்வதாகட்டும் அருமையான நடிப்பு..கருணாஸின் மனைவியாக வரும் விஜயலக்ஷ்மி வீரமணி அவருக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் ..!

வழக்கறிஞர் நிமிஷா சஜயன் வழக்கை வாதாடும் விதம் அருமைவழக்கு ஒவ்வொரு முறையும் திசை திரும்பி பெரிய பூதமாக கிளம்ப அதிலிருந்து மீண்டு வர அவர் போராடும் நடிப்பு ராக்ஸ்சாம் CS இசை படத்துக்கு பெரிய பலம் ..ராமேஸ்வரத்தை அழகான ஒளிப்பதிவு மூலம் நம் கண் முன்னே நிறுத்திய ஆல்பி ஆண்டனியை பாராட்டலாம் .

இயக்குனர் சஜீவ் பழூர் மலையாள வரவு தமிழுக்கு அருமையான திரைக்கதை எப்போவும் ஜெயிக்கும் என்பதற்கு இந்த இயக்குனரின் தன்மானத்துக்கு என்னவிலைஎன்ற கேள்வி நீதி மன்றங்களை அசைத்து பார்க்கும் என்பதில் ஐயமில்லை ..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.4/5